உ
திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
சிவபரத்துவ நிச்சயம்
சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை
திருநெல்வேலி பேட்டை
ESWARAMOORTHY PILLAI
முன்னுரை
![]() |
சகல சமயாதீத சைவ சமயத் தெய்வமாகிய சிவபிரானே சகல தேவாதி தேவனென்று நிர்ணயிக்கும் நூல்கள் தமிழிலும் வடமொழியிலும் பலவுள. அவற்றுட் 'சுலோக பஞ்சகம்' என்பது ஒன்று. நான் அதற்கு வியாக்கியான மொன்றியற்றி அதனைச் 'சுலோகபஞ்சகவிஷயம்' எனப் பெயரிட்டுச் 'சிவநேசன்' அதிபரவர்கள் சகாயத்தாற் புத்தக ரூபமாக அச்சிட்டு வெளிப்படுத்தினேன். சிவபரத்துவ சம்பந்தமாக அந்நூலில் வெளியாயின போக இன்னுஞ் சில வுண்மைகள் என்னுள்ளத்தி லிருந்தன. அவற்றையும் ஒரு நூலியற்றி வெளியிட வேண்டுமென்ற ஆசை எனக்குண்டாயிற்று. அவ்வாசையாற் றோன்றியதே 'சிவபரத்துவ நிச்சயம்' என்னும் இந்நூல். கூடியவரை இ·தொரு முழுநூலாயிருக்க வேண்டுமென்று நான் எண்ணியதால் என் 'விஷயம்' முதலியவற்றில் வெளியான கருத்துக்களும் இதில் வந்திருக்கும்.
முதன் முதலில் நானியற்றிய செய்யுள்நூல் இதுவே. சிவபரத்துவ வுண்மைகள் சைவமக்கட்கு மனப்பாடமாக வேண்டுமென்ற எண்ணமே நான் இச் 'நிச்சய'த்தைச் செய்யுள்நூலாக இயற்றக் காரணமாயிற்று. வைதிக சைவோத்தமர்கள் இந்நூலிற் காணப்படுஞ்சொற்குற்றம் பொருட்குற்றங்களை க்ஷமித்து என்னை ஆதரிக்கும்படி நான் அவர்களைப் பிரார்த்திக்கிறேன். விநாயக வணக்கம் ஆசிரிய வணக்கம் உள்பட இந்நூற் செய்யுட்கள் இருநூற்றுப் பதினைந்து.
நான் ஒரு தடவை மதுரைக்குப் போயிருந்த காலத்தில் எனக்குப் பாட்டனார் முறையிலுள்ள ஸ்ரீ மாந் மு.ரா. அருணாசலக் கவிராயரவர்களிடம் இந்நூலைச் சுமார் ஒருமாதகாலம் வாசித்துக்காட்டினேன். அப்போது அவர்கள் மிக விருத்தாப்பியரா யிருந்தார்கள். ஆயினும் அவர்கள் இதனைப் பொறுமையோடும் ஆசையோடும் செவிமடுத்துப் பரம சந்தோஷமடைந்து என்னைப் பார்த்துப், 'பேரப் பிள்ளை! உம்முடைய இந்நூலிலுள்ள செய்யுட்கள் மிகவும் நயமுடையனவா யிருக்கின்றன. கருத்துக்களும் உயரியனவே. ஆனால் இந்நூல் தழுவிச்செல்லும் பிரமாணங்களிற் பல வடமொழி வேதாதிகளிலுள்ளன வாகலின் அவை சம்பந்தமாக இதனை நான் மாத்திரம் ஆராய்ந்து அபிப்பிராயஞ் சொல்லுதல் போதாது. இவ்வூரிலுள்ள சிவஸ்ரீ கலியாண சுந்தர பட்டரவர்களை நான் உமக்கு அறிமுகப்படுத்திவைப்பேன். அவர்களிடமும் நீர் இந்நூலை வாசித்துக்காட்டி அபிப்பிராயங்கேளும்' என்று கூறி எனக்கு அப்பட்டரவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார்கள். சுமார் பதினைந்து நாட்கள் நான் அவர்கள் வீட்டுக்குப்போய் இந்நூல் முழுவதையும் ஒவ்வொரு நாளும் பிற்பகலில் சுமார் இரண்டுமணி நேரம்வரை சிலசில செய்யுட்கள் வீதம் வாசித்துக்காட்டி முடித்தேன். இந்த நூலில் அந்தப்பிரமாண வாக்கியங்களுக்கெல்லாம் செவ்வையாகப் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறதென்று அவர்களுஞ் சம்மதித்தார்கள். அப்பால் அவ்விரு பெரியார்களிடத்திலும் அபிப்பிராயங்களை எழுத்துமூலம் தரும்படி நான் வேண்டினேன், அவர்களுந் தந்தார்கள். அவை இதிற் சேர்க்கப்பட்டுள்ளன.
அப்பால் என் வீட்டிற்கு அவ்வப்போது வந்த சைவ சித்தாந்த அறிஞர் சிலரிடம் பொழுது போக்காக நான் இந்நூலைக் காட்டினேன். அவர்கள் நூல் முழுவதையும் படித்துப் பார்க்க அவகாசமில்லாதவராய்ப் பார்த்தவரையும் மெச்சி இதனைச் சீக்கிரம் அச்சிடும்படி என்னைத் தூண்டிச் சென்றார்கள். அப்பெரியார்களுள் ஒருவரும் சைவசமயத்தில் ஆர்வமிக்கவரும் காழிக்கல்விக் கழகத்து உறுப்பினரும், காழி வித்வான் சைவத்திருவாளர் ப.அ.முத்துத்தாண்டவராய பிள்ளை அவர்களின் மாணவரும், எனக்கு வெகுபிரியரும் ஆகிய ஸ்ரீமாந்-காழி.பி.அகோரம் பிள்ளையவர்கள் இந்நூலை முழுவதும் படித்து உத்ஸாக மேலிட்டவராய்த் தாமே அரும்பதவுரை யெழுதிப் பிரமாணங்களையுஞ் சேர்த்துச் சிவகிருபையால் அச்சிட்டுப் பூர்த்தி செய்தார்கள். இப்பெரிய சிவபணியைச் செய்த அவர்களுக்கு என் வந்தனம் உரியதாவதுடன், அவர்களுக்குச் சகலவித நன்மைகளையுந் தந்து இத்தகைய சிவபணிகளில் அவர்களுடைய மனம் இடையீடின்றிச் செல்லத் திருவருள் சுரக்குமாறு ஸ்ரீ பார்வதி பதியாகிய ஸ்ரீ பரமசிவனாரின் உபய சரணாரவிந்தங்களையும் நான் பணிகிறேன்.
செங்கற்பட்டு ஸெயிண்ட் கொலம்பா உயர்தர பாடசாலைத் தமிழாசிரியர் வித்வான் பிரம்மஸ்ரீ K.M.வேங்கடராமையா அவர்கள் B.A.,B.O.L., இந்நூலை வெளியிடுதற்கண் பெருமுயற்சி யெடுத்துக் கொண்டார்கள். இவ்வேலையைத் தம் சொந்த வேலைகளில் ஒன்றாகக்கொண்டு அச்சுப்பிழை சரிபார்த்தல் முதலியவற்றையெல்லாம் அவர்களே செய்து உபகரித்தார்கள். அவர்களுக்கு என் வந்தனம் உரியது.
1-12-1939 ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை
நூலாசிரியன்
உ
பதிப்புரை
சைவ சமயத்தில் முழுமுதற் கடவுளுக்குச் சிவன் சங்கரன் சம்பு ஈசுரன் உருத்திரன் ஈசன் அரன் முதலியனவே சிறந்த பெயர்கள்; உமாசகாயம் நீலகண்டம் சந்திரசேகரம் முதலியனவே சிறந்த அடையாளங்கள்; சர்வஞ்ஞ்தை திருப்தி அநாதிபோதம் முதலியனவே சிறந்த குணங்கள். அந்நாமங்களிலும் அவ்வடையாளங்களிலும் அக்குணங்களிலும் அசூயை கொள்பவன் வைதிக சைவ சமயத்தவனாக மாட்டான். ஒருசைவனும் வைஷ்ணவ கிறிஸ்தவ இசுலாமிய மாதியவற்றுள் ஏதாவதொரு சமயத்தைச் சேர்ந்தவனும் கலந்து சம்பாஷிக்கத் தொடங்குங்கால் கடவுளைப்பற்றிய பிரஸ்தாபங்கள் வருமேல் அவ்விருவரும் தத்தம் மதங்களிற் கடவுளுக்கு வழங்கப்படுஞ் சிறப்புப் பெயரை வழங்காமல் கடவுள் ஆண்டவன் கருத்தன் முதலிய பொதுப்பெயர்களை வழங்கலாம். ஆனால் இரண்டு சைவர் தம்முட் கலந்து பேசுங்கால் தெய்வப் பிரஸ்தாபம் வருமிடங்களிலெல்லாம் தம் சமயத்திற் கடவுளுக்குச் சிறப்பாக வழங்கப்படுஞ் சிவாதி நாமங்களையே வழங்கவேண்டும். ஈசுர நாமங் கொண்டே முன்னுள்ள நாத்திகரும் இந்நாட்டில் விவகரித்து வந்துளார். இப்போதும் அந்நாமப் பிரஸ்தாபம் எங்குமுண்டு. சைவம் அப்போது எவ்வளவு வியாபகமுடையதாயிருந்தது, இப்போதும் எவ்வளவு வியாபகமுடையதாயிருக்கிறது என்பதை அவ்வீசுரநாம வியாபகமொன்றாலேயே யறியலாம்.
'சிவபரத்துவ நிச்சயம்' என்னும் இந்நூல் அத்தகைய சிவபரம்பொருளின் பிரபாவங்களைச் சவிஸ்தாரமாய் எடுத்துவிளக்குவது. எனக்குச் சிறந்த நேசராகிய திருநெல்வேலிப்பேட்டை ஸ்ரீமாந். ஆ.ஈசுரமூர்த்திப்பிள்ளையவர்கள் இந்நூலையாக்கிப் பலரிடமுங்காட்டியது போல் என்னிடமுங் காட்டினார்கள். நான் இதனைப் படித்தறிந்ததும் அவர்களுக்குள்ள சைவசாத்திர ஆராய்ச்சியையும் சைவசமயப்பற்றையும் என்னால் அளவிட முடியவில்லை. இதையச்சிட்டுக் கொடுக்க யாரையாவது தேடியதுண்டாவென்று நான் அவர்களைக் கேட்டேன். சைவாபிமானமுள்ள தனவந்தர் யாரையுந் தமக்குத் தெரியாதென்று அவர்கள் சொன்னார்கள். நானே உரையெழுதிப் பிரமாணங்களையுந் திரட்டிச் சேர்த்து இதனை அச்சிடுகிறேன். என்னிடங் கொடுங்கள் என்றேன் நான். அவர்களும் கொடுத்து விட்டார்கள். நான் அரும்பதவுரை யியற்றிப் பிரமாணங்களையுந் திரட்டிச் சேர்த்து இதனை அச்சிட்டுப் பூர்த்தி செய்தேன். இவ்வுரை முதலியவற்றுட் பிழைகளுளவேல் இந்நூலாசிரியரவர்களும் மற்றை அறிஞர்களும் பொறுத்தருள்க.
ஒவ்வொரு செய்யுட்குங் கிடைத்த பிரமாணங்கள் அச்செய்யுளடியில் வருகின்றன. அவை அச்செய்யுளிலுள்ள பல பகுதிகளுக்கும் பிரமாணங்களாக விருக்கும். ஒவ்வொரு பகுதிக்குமுரிய பிரமாணங்களை அவற்றிலிருந்து பிரித்தெடுத்துக்கொள்ளும்படி வாசகர்களை நான் வேண்டுகிறேன். பூர்வபட்சத்துக்குரிய பிரமாணங்களும் அங்குண்டு. வேண்டாதனபோலிருக்கும் பிரமாணங்களை ஒதுக்கிவிடலாம்.
இந்நூல் இவ்வழகான புத்தகவடிவில் மிகச்சுருங்கிய காலத்தில் அச்சாகிவருதற்குத் துணை புரிந்தவர்கள் என்னுடைய மாணாக்கரும் முன்னுரையிற் கண்டவருமாகிய பிரம்மஸ்ரீ K.M.வேங்கடராமய்யா அவர்கள் B.A.,B.O.L., ஆவார்கள். அவர்கள் செய்த அந்நன்றி மறக்கற்பாலதன்று.
6-1-1940 காழி.P.அகோரம் பிள்ளை
பதிப்பாசிரியன்.
உ
அபிபிராயங்கள்
வேத சிவாகமாதி சகல சாஸ்திர பண்டிதோத்தமராகிய
மதுரை
சிவஸ்ரீ.ம.கல்யாணசுந்தர பட்டரவர்கள்
தந்தது
ஆசிரியப்பா
தென்றமிழ் நாடு செய்தவப் பயனென
வந்திடு நெல்லை வளம்பதிக் கணித்தாம்
பேட்டை யென்னும் பெருநக ரதனுள்
தாவில் பரம்பரைச் சைவ வேளாண்
மரபில் வந்தோன் மதிநலம் வாய்ந்தோன்
ஈசுர மூர்த்தி யெனும்பெய ருடையோன்
செய்சிவ பரத்துவ நிச்சயச் செழுநூல்
எவரும் பொருளை யெளிதிற் கண்டு
மகிழத் தக்க வகையில் விளங்கி
யருமறை யாகம புராண மாதி
சாத்திர மனைத்தொடுஞ் சமஞ்சஸ மாகி
வியனறி வுடையோர் வியக்க வுளதே.
13-6-1937
--------------------------------------------------------------------------------
திருக்குறள் தெளிபொருள் வசனம், பரங்கிரிப் பிரபந்தத்திரட்டு முதலிய பலநூல்களுகாசிரியரும் மதுரைத் தமிழ்ச் சங்க வித்துவானும்
ஆகிய
சைவத்திருவாளர்
மு.ரா.அருணாசலக் கவிராயரவர்கள்
தந்தது
இந்நூலாசிரியர் தமிழ் வித்துவான் ஸ்ரீ த.ஆறுமுக நயினார் பிள்ளையவர்களுக்குச் சீமந்த புத்திரராய்ப் பிறந்து சிறுவயதிலே ஆங்கிலமுந் தமிழுங் கற்று......... உபாத்தியாயரா யிருக்கின்றனர். அப்படியிருக்கும்போது தமிழ்க் கல்வியை.........நிரம்பக் கற்கவேண்டுமென்று நினைத்துக் கலியுக வரதராகிய முருகக்கடவுள் திருவருளால் நூலாராய்ச்சி செய்தனர். (அதனால்) பரத்துவ நிச்சயம் பிறப்பிறப்பில்லாத பரம்பொருளாகிய சிவனொருவர்க்கே கூறவேண்டு மென்று தெரிந்தனர்........மேற்கூறிய உண்மையைத் தெளிந்து 'தாமின்புறுவ துலகின் புறக்கண்டு' என்னுஞ் சுருதிக் கிணங்க இலை மறை காய் போற் கிடந்த விஷயங்களை யெல்லாம் வெள்ளிடை மலைபோல் விளங்குமாறு தர்க்க சுத்தியாகச் 'சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்' என்ற அழகுடனே இருநூற்றுப்பதினைந்து செய்யுளால் ஒரு சிறு நூல் செய்து.....மதுரைக்கு வந்து என்னிடம் ஒவ்வொரு பாடலையும் நேரிலே வாசித்துக் காட்டினர். பாடல்களைக் கேட்குந்தோறும்.......அதி மாதுரியமாக இருந்ததைக் கண்டு மிகுதியுஞ் சந்தோஷமுற்றேன். பற்பல சமயத்தாரும் இதற்கொரு மறுப்பெழுத வேண்டுமென்று துணிந்தால் அவருக்கு வேதாகமங்களிற் பிரமாணங் கிடைக்கமாட்டாது.............ஆதலால் அவர் கருத்து நிரம்பாததாய் முடியும். தமிழ்ச் செய்யுளில் பரத்துவ நிச்சயங் கூறும் இந்த நூல் போல ஒரு நூல் இருக்கிறதாக நான் கேட்டதுமில்லை, கண்டதுமில்லை. பரத்துவ நிச்சயந் தெரியப்புகுவார் அரிய பெரிய நூல்களைப் படித்துப் பெருங்காலம் போக்காமல் இந்த சிறு நூலை ஒரு முறை படித்தாலே ஐயமறத் தெளிவாய் விளங்கும். தமிழுலகத்திற்கு இவ்வுதவி புரிந்த நூலாசிரியருக்கு நாமெல்லாம் என்றும் நன்றியறிதல் பாராட்டுங் கடப்பாடுடையோம்.
16-6-1937
--------------------------------------------------------------------------------
செங்கற்பட்டு ஸெயிண்ட் கொலம்பா
உயர்தர பாடசாலைத் தமிழாசிரியர்
வித்வான்
பிரம்மஸ்ரீ. K.M.வேங்கட ராமையா, B.A.,B.O.L. அவர்கள்
தந்தது
'நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சளே
புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்' தான் தொழு மன்பர் கட் கெல்லாம் பெருவிருந்தளிக்கும் 'சிவபரத்துவ நிச்சயம்' என்னும் இந்நூல்.
'வாழ்த்த வாயும்நினைக்கம டநெஞ்சுந்
தாழ்த்தச் சென்னியும் தந்தத லைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித்து தியாதே' யிருக்கும் நம்மவர்களுக்கு இத்தகைய நூலொன்று இன்றியமையாததே யன்றோ?
'விச்சை யாவதும் வேட்கைமை யாவதும்
நிச்சல் நீறணி வாரைநி னைப்பதே' யென்ற தேவாரத்தைக் கடைபிடித்தொழுகும் சைவ வள்ளலராகிய திருநெல்வேலிப்பேட்டை திருவாளர் ஆ.ஈசுரமூர்த்திப்பிள்ளையவர்கள் இந்நூலை யாத்து உலகுக்கு உதவியுள்ளார்கள். இந்நூலுக்கு அரும்பதவுரையும், பிரமாண முதலியனவும் எனது ஆசிரியர் சிவஸ்ரீ காழி பி.அகோரம்பிள்ளையவர்கள் எழுதிக் கோத்து உதவிய செயல் சாலச் சிறந்த தொன்று. - - - இந்நூற் பாடல்கள் செவிக்கின்பந் தருமாறும், கற்றோரும் மற்றோரும் அறியுமாறும், எளிய நடையில் இருந்தபோதிலும், விஷயப் பெருமைக்கு ஏற்றவாறு ஆங்காங்குக் கடினமாக விருக்கும் சொற் றொடர்களுக்குத் தெளிபொருளெழுதி யுபகரித்தல் கற்றறிந்தோர்தம் கடனே. அன்றியும், இந்நூற் பொருட்குக் கொடுத்துள்ள பிரமாணங்கள் கற்றறிந்தோர்க்கும் ஓர் விருந்தாகும்.
இந்நூலாச்சுவாகன மேறுங்கால் எழுத்தெழுத்தாக இந்நூலை வாசிக்கும் பேற்றை நான் பெறலானேன். அப்பொழுது யான் படித்தவற்றுள் என்னைக் கவர்ந்த - - - விஷயங்களுட் சில ஈண்டுக் குறிப்பிடத்தக்கன. அவை 25, 59, 60, 63, 92, 98, 108, 124, 151, 169,170 ஆஞ் செய்யுள் முதலியவற்றின் கருத்துக்களென்க.
இவை நிற்க,
'நெஞ்சம் உமக்கே யிட மாகவைத்தேன்
நினையா தொரு போதும் இருந்தறியேன்'
'சலம்பூ வொடு தூபம் மறந்தறியேன்
தமிழோ டிசை பாடல் மறந்தறியேன்
நலந் தீங் கிலும்உன்னை மறந்தறியேன்
உன்னாமம் என்னாவில் மறந்தறியேன்' ஆகிய இவை சூலை நோய் தீரப்பாடிய திருநாவுக் கரையாது திருப்பதிகத்திற் காணப்படுகின்றன. இவற்றின் பொருள் தெளிவாக விளங்குகின்றிலது. அதற்குக் காரணம் இப்பதிகம் சமண் சமயத்தினின்று சைவசமயம் புகுவதற்குக் காரணமாய சூலை வேதனையைத் தீர்க்க வேண்டுமென்று பாடிய திருப்பதிகத்தில் அமைந்திருத்தலே யாகும். சமண் சமயத்திருந்தபொழுது அப்பமூர்த்திகள் சிவ பரம்பொருளை நினைக்கவே யில்லையென்பது. 'அறந்தெரியா ஊத்தைவாய் அறிவில் சிந்தை யாரம்பக் குண்டரோ டயர்ந்து நாளும், மறந்து மான் திருவடிகள் நினையமாட்டா மதியிலியேன்' என்ற வடிகளால் தெள்ளிதின் விளங்கும். அவ்வாறாயின், வாகீசப் பெருமான் மேற்கூறிய வாக்கியங்களில் குறித்த வழிபாடு எப்பொழுது செய்யப்பட்ட தெனின், பலர் பலவாறு கூறுப. ஒரு சாரார் முன் ஜன்மத்துள் என்ப. மற்றொரு சாரார் அச் சமண் சமயத்திருந்த பொழுது செய்த வழிபாட்டைக் குறிக்கும் என்றும், 'விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயஞ் செய்தே, எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்றதாகும்' 'யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வமாகி யாங்கே, மாதொரு பாக னார்தாம் வருவர்' என்ற இன்னோரன்ன பிரமாணங்களைக் காட்டி அவ்வழிபாடு முழுமுதல் தலைமையுடைய இறைவனையே சாருமென்றுங் கூறுவர். இதுவே எமக்கும் உடன்பாடு. இந்நூல் 84 ஆவது செய்யுளைக் கண்டதும் யான் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை; அணுவளவிருந்த சந்தேகமும் நீங்கிற்று. ஆனால் இச் செய்யுட் பிரமாணத்தில் கண்ட ஸ்மிருதிவாக்கிய பாடம் யான் உபதேசிக்கப்பட்ட வாக்கியத்தினும் சிறிது வேறாகும். 'சங்கரம் ப்ரதிகச்சதி' என்பது இந்நூலிற் கண்டது; 'கேசவம் ப்ரதிகச்சதி' என்பது எனக்கு உபதேசம். ஆயினும், மற்றைய ஆதாரங்களை நோக்குழி 'ஈச்வரம் ப்ரதிகச்சதி' என்பதே பொருத்தமான பாடமாகும் என்று கொள்ளற் பாற்று. இது நிற்க.
ஞானிக்கு எம்மதமும் சம்மதமென்றல் சைவசமயக் கொள்கை யாகாது என்பது இந்நூல் 179 ஆவது செய்யுட் கருத்தாயினும், எம்மதமும் சம்மதமெனும் இக்காலத்து 168ஆவது செய்யுட் கருத்துச் சிறிது பொருத்தம் இன்றாகும். உபநிடதகாலம் வேறு; இக்காலம் அத்தகையதொரு அபிப்பிராயத்துக்கு இடந் தராதன்றோ?............
இக்காலத்தில் நந்தம் செந்தமிழ் நாட்டினருட் சிலர் வடமொழிப் பயிற்சியை முற்றும் வெறுக்கின்றார்கள்.----- இந்நூல் 201 முதல் 206 ஆவது செய்யுள்வரை 'சைவனாவான் வடமொழியும் கற்றலவசியம்' என்ற விஷயத்தைப்பற்றி விரிவுற எழுதியுள்ளமையையும், வாழ்த்துச் செய்யுளையும் கண்டதும் என்மனம் வரம்பிகந்த மகிழ்வெய்திற்று. 'வாழ்த்துவார் வாயினுள்ளா'ரும், 'சிந்திப்பார் சிந்தையுள்ளாரு' மாகிய 'நீதியாற் றொழுவார்கள் தலைவனாம்', 'தாயினும் நல்ல சங்கரன்', 'ஆரியமும் தமிழும் ஆவர்' என்பது தேவராதிகளைப் படித்தவர் நன்கறிகுவர். 'ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய், அண்ணாமலையுறை யெம் அண்ணல் கண்டாய்' என்றது காண்க. 'வடமொழியும் தென்றமிழும் மறைகள் நான்கும் ஆனவன்' பெருமை யறிய இருமொழியும் அறிவது இன்றியமையாததென்று குறித்தமை இந்நூலாசிரியருடைய மனவிரிலின் தன்மையைத் தெற்றென விளக்குகின்றது.
நாத்திகர்தாம் மிகுந்திடுமிக் கலிகாலத்தில், பணமே பத்துஞ் செய்யும் என்னும் இப்பாழ்காலத்தில், நாட்டை யாமே ஆளல் வேண்டும், யாமே ஆளல் வேண்டும், நாடுகள் யாவும் கொள்ளல் வேண்டும் என்ற அவாமிக்கு இரத்தம் சிந்தும் இக்காலத்தில் இத்தகைய நூலுக்கும் இடன் உண்டுகொல்?
ஆயினும், இந்நூல்
'செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று
பத்திசெய் மனப் பாறைகட் கேறுமோ?'
எனில் ஏறாது தான். ஆயினும் புறச்சமய நெறிநின்று அகச்சமயம் புக்கும் அம்முறையே மேற் சென்று சென்று சைவத் திறத்தடைந்து சிவனடிசோவல்ல நற்றவமுடையார் இதனைப் பெரிதும் போற்றவே செய்வரென்க.
1-1-1940
--------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------
உ
திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
சிவபரத்துவ நிச்சயம்
நூல்
இந்நூல் இனிது முடிதற் பொருட்டுச் செய்யப்படும் விநாயக வணக்கம்.
மன்னுசிவன் மெய்ப்புகழை வந்தமட்டில் யான்பாடற்
கென்னுடைய பேராசை யீர்த்ததெனை - யன்னதனா
லத்திமுக வுன்பதநா னஞ்சலித்துச் சில்பாடற்
கொத்துதுரைப்பே னெற்கருணீ கூட்டு.
(அரும் பதவுரை) மன்னு - நிலைபெற்ற; மெய்ப்புகழை - பொருள் நிறைந்த கீர்த்தியை; வந்தமட்டில் - பாடத்தெரிந்த வரையில்; ஈர்த்தது - இழுத்தது; அன்னதானால் - அதனால்; அத்திமுக - விநாயகரே! பதம் - திருவடிகளை; அஞ்சலித்து - வணங்கி; சில - சில; கொத்து - திரட்டு; உரைப்பேபன் - இயற்றுவேன்; எற்கு - எனக்கு; நீ எற்கு அருள் கூட்டு என்க.
******
இந்நூலை யாக்கியோர் தமக்குச் சைவசித்தாந்தங் கற்பித்த ஆசிரியரை வணங்குதல்.
விளங்கொளி வெள்ளி மலைமிசை யுமைதன்
னிடமுற வீற்றிருந் துயிர்க்குக்
களங்கம தொழித்துப் பரகதி யருளுங்
கண்ணுதற் பரமனே பரமென்
றுளங்கொள நாயேற் கொளிருநான் மறையி
னுறுதியை யுணர்த்தி வாழ்வளித்த
வளங்கொழு நெல்லைச் சிதம்பர ராம
லிங்கரின் மலரடி சரணே.
(அ-ரை) வெள்ளி மலைமிசை - கயிலையில்; இடம் உற - இடப்பாகத்திற் பொருந்தும்படி; வீற்றிருந்து - மகிழ்ந்திருந்து; களங்கமது - பாசக்குற்றங்களை; பரகதி - மேலான முத்தியை; கண்ணுதற் பரமனே - சிவபிரானே; பரம் - முழு முதற் கடவுள்; உளம் கொள - மனதிற் பதியும்படி; ஒளிரும் - பிரகாசிக்கிற; நால் மறை - இருக்கு ஈசுர் சாமம் அதர்வணம்; உறுதியை - சத்தியார்த்தத்தை; கெழு - நிறைந்த; நெல்லை - திருநெல்வேலி; சிதம்பரராமலிங்கர் - அவ்வாசிரியரின் திருநாமம்; அச் சிதம்பர ராமலிங்கக பிள்ளையவர்கள் திருநெல்வேலி ம-தி-தா-ஹிந்து கலாசாலையில் தமிழாசிரியராயிருந்து வருகிறார்கள்.
******
நூல்
வியட்டியாகிய அகர உகர மகரம் முறையே பிரம விஷ்ணு ருத்திரர்க்கு இருப்பிடம். அம்மூன்றின் சமட்டியாகிய பிரணவம் சிவபிரானுக்கு இருப்பிடம்.
இரணிய கருப்ப னவ்வி விலக்குமி கணவ னுவ்வி
லுரமிகு சூல மேந்து முருத்திரன் மவ்வி லாவர்
பரசிவ பிரான்சம் வர்த்த காக்கினி பயில்பே ராகப்
பிரணவ சமட்டி யென்னும் பீடமீ திருப்ப னன்றே.
(அ-ரை) இரணிய கருப்பன் - பிரமன்; இரணிய கருப்பனும் இலக்குமி கணவனும் உருத்திரனும் என உம்மை விரித்து ஆவரென்பதற்குப் பன்மை வினைமுதல் காண்க. ஆவர் - இருப்பர்; தோன்றுவரெனினுமாம். பயில் பேர் ஆக - தனக்கு வழங்கப்படும் பெயராகக் கொண்டு; பிரணவ சமட்டி - சமஷ்டிப் பிரணவம்; பீடமீது - ஆசனத்தில்.
'அகார: -- ப்ரஹ்மா --உகார: -- விஷ்ணு -- மகார: -- ருத்ரா¡ -- ஓங்கார: -- ஸம்வர்தகோக்நி - -' என்ற அதர்வசிகோபநிஷத்தும், 'பூர்வா மாத்ரா - - ப்ரஹ்மா - - த்விதீயா - - விஷ்ணு: - - த்ருதீயா - - ருத்ரா - - சதுர்த்யா - - ஸம்வர்தகோக்கி - -' என்றற நரஸிம்ஹ பூர்வதாபிநியுபநிஷத்தும், 'அகாரே ஸம்ஸ்திதோ ப்ரஹ்மா உகாரே விஷ்ணுராஸ்தித: மகாரே ஸம்ஸ்திதோ ருத்ராஸ் ததோஸ்யாந்த: பராத்பர:' என்ற பிரஹ்மவித்யோபநிஷத்தும், 'அகாரம் ப்ரஹ்மாணம் - - உகாரம் விஷ்ணும் - - மகாரம் ருத்ரம் - - ஓங்காரம் ஸர்வேச்வரம்' என்ற நாஸிம்ஹோத்தரதாபிநியுபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். ஸம்வர்த்தகாக்கினி பதமும் ஸர்வேசுர பதமும் பரியாயங்களாய் வந்திருத்தல்காண்க. அவ் வீசுரபதம் சிவபிரானுக்கே யுரியது. (க)
******
பிரணவத்தின் அர்த்த மாத்திரையிற் சிவலோக மிருக்குமென்பதால் அவ்வர்த்த மாத்ரா தெய்வம் சிவ பிரானே யென்பது.
அவ்வதி லிருக்கும் பூமி யந்தர மிருக்கு முவ்வில்
மவ்வதி லிருக்குஞ் சொர்க்கம் வாக்கொடு மனமுஞ் செல்லாத
திவ்விய வுமைவாழ் பாகச் சிவபிரான் சோம லோக
மெவ்வமி லருத்தந் தன்னி லிருக்குமென் றுரைக்கும் வேதம்.
(அ-ரை) அந்தரம் - அந்தரிக்ஷம்; உமைவாழ்பா கச்சிவபிரான் என்றது சோமன் என்றதை விளக்கியபடி; சோமலோகம் - சிவலோகம்; எவ்வம் - கேடு; அருந்தந் தன்னில் - அருத்த மாத்திரையில்.
'கேவலமகாரோகார மகாரார்த மாத்ரா ஸஹிதம் ப்ரணவமூஹ்ய' என்ற ராம ரஹஸ்யோபநிஷத்தும், 'அகாரோகார மகாரார்த மாத்ராத்மிகா' என்ற வராகோபநிஷத்தும், 'அர்த்தமாத்ரா ஸமாயுக்த: ப்ரணவோ மோக்ஷதாயக:', "ப்ருதிவி - - அகாரே - - அந்தரிக்ஷம் - - உகாரே - - த்யெள: - - மகாரே - - பஞ்ச தைவதம் ஓங்காரம் ' என்ற தியாநபிந்தூப நிஷத்தும், 'ப்ருதிவ்யகார: - - அந்த ரிக்ஷம் ஸ உகார: - - த்யெள: ஸ மகார: - - ஸோமலோக ஒங்கார:' என்ற நரஸிம்ஹ பூர்வ உத்தாதாபிநியுபநிஷத்துக்களும் அதர்வ சிகோபநிஷத்தும், 'அரைமாத்திரையி லடங்கும்மடி' என்ற தேவாரமும், 'மஹோசாநமவாங்மநஸகோசரம்' என்ற சரபோநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (உ)
******
மற்றத் தேவர்கள் வைத்துத் தியானிக்குந் தானங்களுக் கெல்லாம் உயர்ந்தது துவாதசாந்த ஸ்தானம். அங்குவைத்துத் தியானிக்கப் படுபவர் சிவபிரானென்பது.
ஈரிரு முகவ னாபி யிடத்தரி யிதயந் தன்னி
லோரிரு புருவ மையத் துருத்திரன் றுவாத சாந்தச்
சீரிய தான மீது சிவபிரா னிவர்க டம்மை
நேரிய யோகி யென்று நிறுத்துவன் றியானத் தாலே.
(அ-ரை) ஈர் - இரு முகவன் - பிரமன்; நாபி - கொப்பூழ்; ஓர் - சிறந்த; மையத்து - நடுவில்; என்றும் - எப்போதும்; நிறுத்துவன் - வைத்து ஏத்துவான்.
'த்வாத சாந்தபதம் ஸ்தாநமிதி' என்ற தக்ஷ¢ணாமூர்த்தி யுபநிஷத்தும், 'சீர்ஷோபரி த்வாதசாங்குல ஸ மீ க்ஷ¢துரம்ருதத்வம் பவதி' என்ற அத்வய தாரகோபநிஷத்தும், ' ப்ரஹ்மரந்த்ரே மஹாஸ்தாநே வர்ததே ஸததம் சிவா| சித்சக்தி:' என்ற யோகசிகோபநிஷத்தும், 'ப்ரஹ்மாணம் நாபெள - - விஷ்ணும் ஹ்ருதயே - - ருத்ரம் ப்ரூமத்யே - - சர்வேச்வரம் த்வாத சாந்தே' என்ற நரஸிம்ஹோத்தரதாபிநியுபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.
******
இன்னொரு வகைத் தியான முறையில் உச்சஸ்தானமா யிருப்பது நெற்றி. அதில் வைத்துத் தியானிக்கப் படுவருஞ் சிவபிரானென்பது.
அயனெனு மவனை நெஞ்சி லரிதனைக் கண்டந் தன்னி
லுயவினை யுயிர்கட் கோட்டு முருத்திர தேவை நாவிற்
செயமெலா மன்பர்க் காக்குஞ் சிவபிரான் றன்னை நெற்றி
நயமிகு மிடத்தி னாட்டி நாளுநற் றியானஞ் செய்யே.
(அ-ரை) உயவினை - துன்பத்தை; நயம் - நன்மை; நாளும் - தினந்தோறும்.
'ப்ரஹ்மணோ ஹ்ருதய ஸ்தாநம் கண்டே விஷ்ணு: ஸ மாச்ரித: தாலு மத்யே ஸ்திதோ ருத்ரோ லலாடஸ்தோ மஹேச்வர:' என்ற பிரமவித்யோப நிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (ச)
******
ஒவ்வொரு தேவரும் ஒவ்வொரு வண்ணராயிருக்கச் சிவபிரான் மாத்திரம் சர்வ வர்ணங்களையுந் தம்பாற் கொண்டவரென்பது.
மஞ்சளி னிறவ னாகி மாமறைக் கிழவன் வாழ்வா
னஞ்சன வண்ண னாவா னரவமீ துறங்குந் தேவன்
விஞ்சிய வெள்ளைத் தேவாய் விளங்குவ னரனால் வேதச்
செஞ்சொலு முரையு மான சிவபிரான் சருவ மன்னன்.
(அ-ரை) நிறவன் - நிறத்தையுடையவன்; மாமறைக்கிழவன் - பிரமன் அஞ்சனம் - மை; அரவமீது உறங்கும் தேவன் - விஷ்ணு; விஞ்சிய - மிகுந்த; அரன் - உருத்திரன்; உரை - பொருள்.
'பீதா - - ப்ரஹ்மதைத்யா - - க்ருஷணா விஷ்ணு தைவத்யா - - சுசுக்லா ருத்ரா தைவத்யா - - ஸர்வ வர்ணா புருஷ தைவத்யா' என்ற அதர்வசிகோப நிஷத்தும், 'மற்றுமற்றும் பல்பல வண்ணத்தராய் ' என்ற தேவாரமும், 'ருத்ரோர்த்த அக்ஷர: ஸ உமா' என்ற ருத்ரஹ்ருதயோபநிஷத்தும், 'ஸர்வ நாதமய: சிவ: ' என்ற தோஜோ பிந்தூப நிஷத்தும், 'ஸர்வாக்ஷ¡மய:' என்ற நாரதபரிவ் ராஜகோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். புருஷ பதம் சிவபிரானுக்கே யுரிய பெயர். (ரு)
******
தம்பாற் சர்வ வர்ணங்களையுங் கொண்டதுபோல் ஒருவர்ணத்தையுங் கொள்ளாமல் ஸபடிகம்போல விளங்குபவரும் சிவபிரானே யென்பது.
மருமலி மலரோன் செய்யன் மங்குலி னிறவன் மாலோ
னுருமலி கபில வண்ண முருத்திர மூர்த்திக் குண்டால்
கருமலி யுயிர்கட் கெல்லாங் களைகணாய்த் தானோர் போதுஞ்
செருமல முறாத செல்வச் சிவபிரான் படிக வண்ணன்.
(அ-ரை) மருமலி மலரோன் - பிரமன்; மங்குல் - இருள்; உருமலி - அழகு நிறைந்த; கருமலி - கருப்பவாசங்களை அளவு கடந்து அடைகிற; களைகண் - ஆதரவு; செருமலம் - போர் செய்கிற மும்மலம்; படிகம் - பளிங்கு, இச் செய்யுளில் மற்றொரு வகை வர்ண வரிசை யுண்மை காண்க.
'ப்ரஹ்ம தேவத்யா ரக்தா வர்ணோ - - விஷ்ணு தேவத்யா கிருஷ்ணா வர்ணோந - - ஈசாந தேவத்யா கபிலா வர்ணேந - - ஸர்வ தேவத்யாவ்யக்தி பூதா ஸ்வம்விசரதி சுத்தாஸ்படிக ஸந்நிபாவர்ணோந' என்ற அதர்வ சிரோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (சா)
******
ஸர்வ லோகாதீதமாய்ப் பாழத்திஸ்தானமாய் விளங்குவது சிவலோக மென்பது.
இந்திர னுலகின் மேலே யிருந்திடும் பிரம லோகஞ்
செந்திரு கணவ னாடத் திசைமுக னுலகின் மேலா
முந்தொளி யுலகஞ் சேரு முருத்திரற் கதன்மே லந்நாட்
டந்தம தாகு முத்தி யருள்சிவ பிராற்கு நாடே.
(அ-ரை) செந்திரு கணவன் - விஷ்ணு; உந்து ஒளி - வீசுகின்ற ஒளியையுடைய; அந்தமது - முடிவில்; ஆகும் - இருக்கும்; சிவபிராற்கு நாடு - சிவலோகம். முத்தி அருள் என்பது சிவபிரானுக்கு அடை. முத்தியருள் சிவபிராற்கு நாடு அந்நாட் டந்தமது ஆகும் என்க.
'ஷஷ்ட்யா மிந்த்ரஸ்ய ஸாயுஜ்யம் ஸப்தம் யாம் வைஷ்ணவம் பதம் அஷ்டம் யாம் வ்ரஜதே ருத்ரம் - - த்வாதச்யாம் ப்ரஹ்ம சாச்வதம் - - சிவம் - - ' என்ற நாதபிந்தூப நிஷத்து இச்செய்யுட்ட்குப் பிரமாணம். பிரமனுலகம் ஏழி லடங்குவதையும் விஷ்ணு பதத்தின் கீழிருப்பதையும் யூகித்தறிக. ஏனை யுலகங்களின் வரிசையையும் அவ் வுபநிஷத்திற் காணலாம். (எ)
******
மற்ற மூன்றவத்தைகளுக்கு அதீதமாய துரியத்துக்குத் தெய்வம் சிவபிரானென்பது.
மலரவ னனவில் வாழ்வன் மாலவன் கனவி லேய்வ
னுலவறு சுழுத்தி சேர்வ னுருத்திர னெங்கு மென்றுந்
திலமுறு நெய்போ னிற்குஞ் சிவபிரான் றுரியந் தன்னி
னிலவுவ னிதனை வேத நெறியின ரறிவ ரன்றே.
(அ-ரை) ஏய்வன் - பொருந்துவான்; உலவு அறு - கெடுத லற்ற; எங்கும் - சித்தசித்துப் பிரபஞ்ச முழுவதிலும்; என்றும் - எக்காலத்திலும்; திலம் -எள்; நிலவுவன் - விளங்குவான்.
'ஜாகரிதே ப்ரஹ்மா ஸ்வப்ரே விஷ்ணு: ஸ¤ஷ¤ப்தெள ருத்ரஸ் துரீய மக்ஷரம்' என்ற பிரமோபநிஷத்தும் பரப்பிரமோபநிஷத்தும், அவஸ்தாத்ரிய தயாதீதம் துரீயம்--ஈசாநம்--' என்ற பஞ்சப்பிரமோபநிஷத்தும், 'திலேஷ¤ தைலம்' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். அக்ஷர பதமும் ஈசாந பதமும் பரியாயங்கள். (அ)
******
வேதம் நாலாவது வஸ்துவைச் சிவநாமத்தாலேயே பிரஸ்தாபிக்குமென்பது.
நான்மறை சதுர்த்தந் தன்னை நலம்பெற வுரைக்கும் போது
மான்மல ருறைவோ னாதி வானவர் பெயர்க ளன்றிப்
பான்மதி மிலைச்சுஞ் சென்னிப் பரமனுக் குரிய நாமந்
தான்மிக வழங்க லாலே தற்பர னவனே யன்றோ.
(அ-ரை) சதுர்த்தந்தன்னை - திரி மூர்த்திகளுக்கும் மேலாகிய நாலாவது பொருளை; நலம் பெற - தெளிவு உண்டாகும்படி; மால் - விஷ்ணு; மலர் உறைவோன் - பிரமன்; பெயர்களன்றி - பெயர்களைப் பிரஸ்தாபியாமல்; பால்மதி மிலைச்சுஞ் சென்னிப் பரமனுக்கு உரிய - சிவபிரானுக்குச் சொந்தமான; நாமம் தான் ஏ - பெயர்களையே; வழங்கலால் - பிரஸ்தாபித்தலால்; தற்பான் - முழு முதற் கடவுள்.
'சிவம்--சதுர்த்தம்' என்ற மாண்டூக்கியோப நிஷத்தும், நரஸிம்ஹ பூர்வ உத்தரதாபிநியுபநிஷத்துக்களும், நாரதபரிவ்ராஜகோபநிஷத்தும், ராமோத் தாதாபிநியுபநிஷத்தும், 'சதுர்த்தம் - - சிவம்' என்ற பஸ்மஜாபாலோப நிஷத்தும், 'சதுர்த்த - - சிவ' என்ற மாண்டூக்கியோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கூ)
******
வணங்குகிறவர் திரிமூர்த்திகளும் வணங்கப் படுகிறவர் சிவபிரானுமாவாரென்பது.
சேவிய னாவ னென்று முபாசியன் றியேய னென்றுந்
தேவிக மறைக ளெல்லாஞ் சிவபிரான் றன்னைப் போற்றிச்
சேவக ராவ ரென்று முபாசகர் தியாதா மாரிங்
காவரே யென்றுங் கூறி யகற்றிடு மூவர் தம்மை.
(அ-ரை) சேவியன் - சேவிக்கப்படுகிறவன்; உபாசியன் - உபாசிக்கப்படுகிறவன்; தியேயன் - தியானிக்கப்படுகிறவன்; தேவிக - தெய்வீக; சேவகர் - சேவிக்கிறவர்; உபாசகர் - உபாசிக்கிறவர்; தியாதாமார் - தியானிக்கிறவர்; அகற்றிடும் - ஒதுக்கும்; மூவர் தம்மை - பிரம விஷ்ணு ருத்ரரை.
'ப்ரஹ்ம விஷ்ணவாதிபி: ஸேவ்யம் - - ஈசாநம்' என்ற பஞ்சப்ரஹ்மோப நிஷத்தும், 'சிவம் - ஸர்வேச்வரம் ஸர்வ தேவை ருபாஸ்யம்' என்ற மஹோபநிஷத்தும், 'ஸதாசிவம் ப்ரஹ்மாதி வந்திதம்' என்ற நரஸிம்ஹ பூர்வதாபி நியுபநிஷத்தும், 'ஸர்வ தேவைருபாஸ்யம்', 'ஸர்வஸ்ய சரணம்' என்ற சவேதா சுவதரோபநிஷத்தும், 'ப்ரஹ்ம விஷ்ணு புரந்தராத் யமாவா ஸேவிதம்', 'மாமே லோபா ஸிதவ்யம்', 'ஏகாமா சாஸ்யம் - - சிவம்' என்ற பஸ்ம ஜாபா லோபநிஷத்தும், 'சிவ ஏகோத்யேய:', 'த்யாயீதே சாநம்' என்ற அதர்வ சிகோப நிஷத்தும், 'ஏகோ ருத்ரோ த்யேய:', ' சிவ ஏவ ஸ்தாத்யேய:' என்ற சரபோபநிஷத்தும், 'நாராயண பரோத்யாதா' என்ற நாராயணோப நிஷத்தும், 'த்யாதா ருத்ர:' என்ற அதர்வ சிகோபநிஷத்தும், 'ராம ஏவ பரம் தப:' என்ற ராம ரஹஸ்யோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (க0)
******
சைவசமயத்து முழுமுதற் கடவுள் நாலாவது வஸ்துவாகிய சிவபிரானே யென்பது.
சுந்தர சதுர்த்த னென்றுந் துகளறு துரிய னென்றுஞ்
சிந்தனை மறைக ணான்குஞ் செய்சிவ பிரானே மாயா
மந்திர மாமிப் பாரில் வழங்கிடு மதங்கட் கெல்லா
முந்திய சைவ மார்க்க முழுமுதற் கடவுள் தாணே.
(அ-ரை) துகள் அது - குற்றமற்ற; மறைகள் நான்குஞ் சிந்தனை செய் சிவபிரானே என்க. செய் என்பதன் வினைமுதல் மறைகள் நான்கும் என்பது. சிந்தனை செய் - சிந்திக்கிற; மாயா மந்திரம் ஆம் - மாயா காரிய வீடாகிய; இப்பாரில் - இவ்வுலகில்; வழங்கிடு - காணப்படுகிற.
'மூவரு முப்பத்து மூவரு மற்றொழிந்த தேவருங் காணாச் சிவபெருமான்' என்ற திருவாசகம் இச்செய்யுட்குப் பிரமாணம்.
இதுவரை வந்தது நாலு தெய்வப் பிரஸ்தாபம். இனி வருவது ஐந்து தெய்வப் பிரஸ்தாபம். சதுர்த்த தெய்வம் இவ்வரிசையிற் சேராது. (கக)
******
பிரமனாதி ஐந்து மூர்த்திகளுட் சதாசிவனே பஞ்சகிருத்தியங்களையுஞ் செய்வரென்பது.
ஆக்குவ னயன்மா லாக்கி யளிப்பனா லாக்கிக் காத்துப்
போக்குவ னரன்மா கேசப் புங்கவ னாக்கிக் காத்துப்
போக்கியே மறைப்ப னெண்ணில் புகழ்ச்சதா சிவன்றான் செய்வ
னாக்குத லளித்தல் போக்கல் மறைத்தனல் லருள்க ளம்மா.
(அ-ரை) மாகேசப் புங்கவன் - மகேச்சுரன்; எண் இல் - அளவில்லாத.
'பஞ்சக்ருத்ய நியந்தாரம்' என்ற பஞ்சப்ரஹ்மோபநிஷத்தும், 'ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார திரோதா நுக்ரஹாதி ஸர்வசக்தி--' என்ற ஸ¤தோப நிஷத்தும், 'பஞ்சக்ருத்ய ஸம்பந்ந: - - பசுபதி' என்ற ஜாபால்யுப நிஷத்தும், 'அயன் முதலிய மூவர்க்கும் முறையே படைப்பு முதலிய மூன்றனுள் ஒரோவொன்று சிறப்புத்தொழிலும், ஏனைய பொதுத்தொழிலுமா மெனவும்; மகேசன் சதாசிவன் இருவர்க்கும் முறையே மறைப்பும் அருளுஞ் சிறப்புத் தொழிலும் ஏனைய பொதுத்தொழிலுமாம்' என்ற சிவஞானமகாபாஷ்யமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கஉ)
******
உடம்பிற் பிரதான உறுப்பாகிய சிரசிற்குரிய தெய்வம் சதாசிவனே யென்பது.
அடிமுதல் முழங்கால் காறு மயனுள னதன்மேன் மாய
னிடைவரை யுள்ளான் றானு விருதயம் வரையி லாவன்
வடுவறு புருவத் தெல்லை மகேச்சுரன் வதிவான் மேலாந்
தடமுடி தனினன் குற்றான் சதாசிவ பரமன் றானே.
(அ-ரை) இடை- இடுப்பு; தாணு - உருத்திரன்; வடு அறு - குற்றமற்ற; வதிவான் - இருப்பான்; தடமுடிதனில் - விசாலமான சிரசில்.
'பாதாதி ஜாநுர் பர்யந்தம் - - சதுர்புஜாகாரம் சதுர்வக்த்ரம் ஹிரண்மயம் - - ஆஜாநோ: பாயுபர்யந்தம் - - காராயணம் தேவம் - - ஆபாயோர் ஹ்ருதயாந்தம் - - ருத்ரம் - - ஆஹ்ருதயாத் ப்ருவோர் மத்யம் - - ஈச்வரம் - - ஆப்ரூமத்யாத்து மூர்த்தாந்தம் - - ஸதாசிவம்' என்ற யோகதத்வோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (கங)
******
மற்றப் பூதங்களை யெல்லாம் வியாபித்துள்ள ஆகாச தெய்வம் சதாசிவனே யென்பது.
மண்ணதி லயன்மா னீரில் வன்னியி லரன்கா லீசன்
றண்ணளி வடிவ மான சதாசிவன் விண்ணி லுள்ளா
ரெண்ணிடு பூத மைந்து மேறலான் முறையா யாங்கே
நண்ணிடு மதிபர் தாமு நாசமி லதிக ரங்ஙன்.
(அ-ரை) வன்னியில் - தீயில்; அரன் - உருத்திரன்; கால் - காற்றில்; அயனும் மாலும் அரனும் ஈசனும் சதாசிவனும் என உம்மை விரித்து உள்ளார் என்பதற்குப் பன்மை வினைமுதல் காண்க; ஏறலான் - வியாபித்தலான்; ஆங்கே - அப்பூதங்களில்; நண்ணிடும் - இருக்கிற; அதிபர் - கடவுளர்; அதிகர் - வியாபகர்; அங்ஙன் - அப்பூதங்களின் வியாபக முறையில்.
'ஆகாசாத் வாயு; வாயோ ரக்கி:| அக்நேராப:| அத்ப்ய: ப்ருதிலீ|| என்ற தைத்திரீயோபநிஷத்தும், பைங்களோபநிஷத்தும், 'ஆகாசாத் வாயுர் வாயோரக்கி ரக்நே ராபோத்ப்ய: ப்ருதிவீ ' என்ற ஸ¤பாலோபநிஷத்தும், 'ஆகாசாத் வாயு: | வாயோ ரக்நி: அக்நேராப: அத்ப்ய: ப்ருதிலீ| எதேஷாம் பஞ்சபூதாநாம் பதய: பஞ்ச ஸதாசிவேச் வர ருத்ர விஷ்ணு ப்ரஹ்மாணச்சேதி' என்ற யோகசூடாமணியுநிஷத்தும், 'ப்ருதிலீ - - சதுர்புஜாகாரம் சதுர் வக்த்ரம் ஹிரண்மயம் - - ஆப: - - நாராயணம் தேவம் - - வஹ்நி - - ருத்ரம் - - வாயு: - - ஈச்வரம் - - வ்யோம - - ஸதாசிவம்' என்ற யோகதத்வோபநிஷத்தும், 'ப்ரஹ்மாணம் ப்ருதிவீ பாகே விஷ்ணும் தோயாம்சகே ததா| அக்ந்யம் சேச மஹேசாந மீச்வரம் சாநிலாம் சகே| ஆகாசாம்சே மஹா ப்ராஜ்ஞ தாரயேத்து ஸதாசிவம்' என்ற ஸ்ரீ ஜாபாலதர்சனோபநிஷத்தும், 'தரண்யெள ப்ரஹ்மா தத்ராதி தேவதா - - ஜலம் விஷ்ணு ஸ்தஸ்யாதி தேவதா - - வஹ்நிருத்ரஸ்தஸ்யாதி தேவதா வாயோர் பிம்பம்து - - ஈச்வரோஸ்யாதி தேவதா ஆகாசமண்டலம் - - தேவதாஸ்ய ஸதாசிவ:' என்ற யோகசிகோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கச)
******
பஞ்ச பூதங்களையும் ஒருசேரச் சதாசிவோபாசனை யாற்றான் சயிக்க முடியுமென்பது.
மண்டனை யயனால் வெல்க மாலினால் வெல்க மண்ணீர்
மண்புன லனலை வெல்க வயங்கர முதலோன் றன்னால்
மண்புன லனல்கா றன்னை மகேசனால் வெல்க வெல்க
மண்புன லனல்கால் வானை வண்சதா சிவனால் மாதோ.
(அ-ரை) மண்நீர் - பிருதிவியையும் அப்புவையும்; வயங்கு - பிரகாசிக்கிற; அரமுதலோன்றன்னல் - உருத்திரனால்.
'த்யாயம்ச சதுர் புஜாகாரம் சதுர் வக்த்ரம் ஹிரண்மயம் தாரயேத் பஞ்சகடிகா: ப்ருதிவீ ஜயமாப்நுயாத் - - ஸ்மரந் நாராயணம் தேவம் - - தாரயேத் பஞ்சகடிகா - ததோ ஜலாத்பயம் நாஸ்திஜலே ம்ருத்யுர் நவித்யதே | ருத்ரம் தருணா மித்ய ஸந்நிபம் - - தாரயேத் பஞ்சகடிகா லஹ்நி நாஸெளந தாஹ்யதே - - தாரயேத் தத்ர ஸர்வஜ்ஞ மீச்வரம் விச்வதோமுகம் தாரயேத பஞ்சகடிகா வாயுவத்வ்யோம பவேத் - - ஆகாசே வாயு மாரோப்ய ஹகாரோபரி சங்கரம் - - ஸதாசிவம் - - யத்ரகுத்ரஸ்திதோவாபிஸ¤க மத்யந்த மச்நுதே' என்ற யோக தத்வோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (கரு)
******
ஆறாதாரங்களுள் உச்சமான ஆஞ்ஞைத் தெய்வம் சதாசிவனென்பது.
விதிபதி சுவாதிட் டானம் விட்டுணு மணிபூ ரத்த
னுதிகதி ரொளியாஞ் சீவர்க் குருத்திர னனாக தத்தன்
வதிபதி விசுத்தி தன்னின் மகேச்சுர னாஞ்ஞை யென்னும்
பதியதி லுறைவோ னன்னோர் பணிசதா சிவனே யாவன்.
(அ-ரை) விதி - பிரமனுக்கு; பதி - இடம்; சீவர்க்கு உதி கதிர் ஒளி ஆம் - உயிர்களுக்கு அந்தகாரத்தை நீக்குவதிற் காலைக் கதிரவன் போலுள்ள; விசுத்திதன்னில் வதிபதி என்க; வதிபதி - இருக்கிற தலைவன்; அன்னோர் - முன் நால்வரும்; எனவே மகேச்சுரனை முன்மூவரும், உருத்திரனை முன் இருவரும், விஷ்ணுவைப் பிரமனொருவனும் பணிவரென்பது சூசனை, ஆறாதாரங்களை யோககுண்டலியுபநிஷத்து 'மூலாதாரம் ஸ்வாதிஷ்டாநம் - - மணிபூரம் - - அநாஹதம் விசுத்தம் ச ஆஜ்ஞா சக்ரம்' என்றும், ஹம்ஸோபநிஷத்து 'ஸ்வாதிஷ்டாநம் - - மணிபூரகம் - - அநாஹதம் விசுத்தெள - - ஆஞ்ஞாம் -- ப்ரஹ்மாந்த்ரம் - - ' என்றும் கணக்கிடும். இங்ங்கு மூலாதாரமும் பிரமாந்திரமுந்தள்ளி அம்மூர்த்திகளின் தாரதம்மியங்காட்ட மற்றவைமட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டன. (கசா)
******
மூன்று மூர்த்திக் கணக்கு வரும்போது அவர்களுக்கதீதனாகிய நாலாவது மூர்த்தியாஞ் சிவபிரானே ஐந்து மூர்த்திக் கணக்கு வரும்போது அவர்களுக்கதீதனாகிய ஆறாவது மூர்த்தியாயும் விளங்குவனென்பது.
அயனென வரியே யென்ன வானென மகேச னென்னச்
சயசதா சிவனே யென்னச் சாற்றுமவ் வைவர் மேலாய்
மயலறு போதா நந்த மயசிவ னென்னு மாறாஞ்
சுயவொளி யிறைவ னாகித் துலங்கலுந் துரியற் குண்டால்.
(அ-ரை) துலங்கல் - விளங்குதல்.
'ப்ரஹ்மாணம் - - விஷ்ணும் - - மஹேசாந மீச்வரம் - - ஸதாசிவம் | அதவாதவ வக்ஷ்யாமி தாரணாம் முநிபுங்கவ | புருஷே ஸர்வ சாஸ்தாரம் போதா நந்தமயம் சிவம்' என்ற ஸ்ரீ ஜாபாலதர்சநோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (கஎ)
******
திரிமூர்த்திகளுட் சேர்ந்த உருத்திரன் சைவசமயக் கடவுளல்ல ரென்பது.
முத்தொழி லியற்றுந் தேவர் மூவருண் மூன்றாந் தேவே
சத்திய சைவ மார்க்கத் தனிமுத லென்பர் தேரா
ரத்தொழி லிறைவ ரெல்லா மஞ்சலி சிரமேற் கொண்டு
வித்தக சதுர்த்த னாறே வினைகளை யென்றுஞ் செய்வார்.
(அ-ரை) முத்தொழில் இயற்றுந்தேவர் - பிரமவிஷ்ணுருத்ரர்; மூன்றாந் தேவு - உருத்திரன்; சைவமார்க்கத்தனிமுதல் - சைவசமயக்கடவுள்; தேரார் - அறியாதவர்; அத்தொழிலிறைவரெல்லாம் - அம்மூவரும்; அஞ்சலிசிரமேற் கொண்டு - வணங்கி; வித்தக - ஞானமய; ஆறே - திருவுள்ளப்படி; வினைகளை - முத்தொழில்களையும்.
'நம்மவ ரவரே, மூவரென்றே யெம்பிரானொடும் எண்ணி விண்ணாண்டு மண்மேல், தேவரென்றே யிறுமாந்தென்ன பாவந்திரிதவரே' என்ற திருவாசகம் இச்செய்யுட்குப் பிரமாணம். (கஅ)
******
திரிமூர்த்திகளுஞ் சிவபிரானிடமே ஒடுங்கித் தோன்றுவரென்பது.
அயனரி தன்னி லாவ னயன்றனி லரிதா னாவ
னயனரி யரனி லாவ ரரனரி யயரி லாவ
னியலிவை கற்ப பேத மீசுர மூர்த்தி தானே
யயனரி யரரைத் தன்பா லாக்கிமுன் னழிப்பான் பின்னர்.
(அ-ரை) ஆவன் - வெளிப்படுவான், ஒடுங்குவான்; இயல் இவை - இப்படி நிகழுகிற இவ்விரண்டும்; கற்பபேதம் - அவாந்தர கற்பங்களி லுண்டாகும் மாறுபாடுகள்; தன்பால் - தன்னிடத்திலிருந்து, தன்னிடத்தில்; ஆக்கி - வெளிப்படுத்தி; முன் - பிரதம சிருட்டியில்; அழிப்பான் - ஒடுக்குவான்; பின்னர் - சர்வ சங்காரத்தில்.
'ஏகோஹவை நாராயண ஆஸீந் நப்ரஹ்மா நேசாந:' என்ற மஹோப நிஷத்தும், 'நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே', 'ருத்ரோ மஹர்ஷி:| ஹிரண்ய கர்பம் பச்யதி ஜாயமாநம்' என்ற நாராயணோப நிஷத்தும், 'லலாடாத் கரோதஜோ ருத்ரோஜாயதே' என்ற ஸ¤பாலோப நிஷத்தும், மமாபிவிஷ்ணோர் ஜநகம்' என்ற சரபோநிஷத்தும், நாராயணாத்திரண கர்போஜாயதே' என்ற திரிபத்விபூதிமஹநாராயணோப நிஷத்தும், 'ப்ரஹ்மயோநிம்' என்ற கைவல்யோப நிஷத்தும், 'ஈசம் புருஷம் ப்ரஹ்மயோநிம்: என்ற முண்டகோப நிஷத்தும், 'ருத்ரோ மஹர்ஷி:| ஹிரண்யகர்பம் ஜநயாம ஸபூர்வம்', ' ருத்ரோ மஹர்ஷி:| ஹிரண்யகர்பம் பச்யதி ஜாயமாநம்', ப்ரஹ்மயோநிம் யோப்ரஹ்மாணம் விததாதிபூர்வம்' என்ற சுவேதாசுவத் ரோப நிஷத்தும், ஸர்வேச்வரம் - - சிவாச்யுதாம் போருஹ கர்ப பூருஹம்' என்ற நாரதபரிவ்ராஜகோபநிஷத்தும், 'சிவம் - - ஹரி ஹர ஹிரண்ய கர்ப ஸ்ருஷ்டாரம்' என்ற பஸ்மஜாபாஸோபநிஷத்தும். 'த்ரயஸ்தை காரணாத்மநோ| ஜாதாஸ் ஸாக்ஷ¡ந் மஹேச்வராதித்யுபக்ரம் யஸ் பஷ்ட முக்தம் தபஸாதோஷ யித்வாது பிதாம் பரமேச்வரம்| ப்ரஹ்ம நாராயணெள பூர்வம் ருத்ரம் கல்பாந்தரே ஸ்ருஜத்| கல்பாந்தரே புநர்ப்ரஹ்மா ருத்ர விஷ்ணு ஜக்நமய: விஷ்ணுச்சபகவாந் தத்வத் ப்ரஹ்மாணமஸ்ருஜத் ப்ரபு: | நாராயணம் புநர் ப்ரஹ்மா ப்ரஹ்மாணம் ச புநர்வ: | ஏவம் கல்பேஷ¤ கல்பேஷ¤ ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்வரா:| பரஸ் பரஸ் மாஜ்ஜாயந்தே பரஸ்பரஜயைஷிண:| தத்தத் கல்பாந்த மதிக்ருத்ய மஹர்ஷிபி: | ப்ரபவ: கத்த்யதே தேஷாம் பரஸ்பர ஸமுத்பவா இதி' என்ற வாயு ஸம்ஹிதையும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (ககூ)
******
திரிமூர்த்திகளையும் சிவபிரான் எளிதிற் சங்கரிப்பவ ரென்பது.
பார்தனை யாக்குந் தேவைப் பாற்கட லிறையைச் சூலஞ்
சேர்கர முதலை யீற்றிற் சிவபிரான் சங்க ரித்த
லார்கலி நீரை முற்று மாங்குறு வடவை யங்கி
யோர்கண மதனிற் சீறி யுண்பதற் கொப்பா மன்றே.
(அ-ரை) ஆர்கலி - கடல்; வடவை அங்கி - வடவாமுகாக்கினி.
'ப்ரஹ்மா விஷ்ணுச்ச ருத்ரச்ச ஸர்வேவாபூத ஜாதய:| நாசமேவாநுதா வந்திஸலிலா நீவபாடபம்' என்ற மஹோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (உ0)
மூன்று மூர்த்தியாகிய உருத்திரர் சிவபிரானை நோக்கித் தவஞ்செய்து அவரிடமிருந்து சிவநாம ரூபாதிகளைப் பெற்றாரென்பது.
மேதகு மூன்றா மூர்த்தி விருப்புடன் சதுர்த்தன் றன்னைப்
பாதம திறைஞ்சி நோற்றுப் பரித்திடப் பெற்றா னன்னா
னோதரு முருவும் பேரு முயர்மறை யதனா லந்தப்
பேதரை யபேத மாக்கிப் பேசலு மாங்காங் குண்டால்.
(அ-ரை) மேதகு - மேன்மையான; பரித்திட - தாங்க; பேதரை - மூன்றாமூர்த்தியையுஞ் சதுர்த்த மூர்த்தியையும்; அபேதம் ஆக்கி - ஒருவராக்கி மூன்றா மூர்த்தியே பரமென்று; ஆங்காங்கு - ஒவ்வோரிடத்தில்; பின் சில செய்யுட்களில் மும்மூர்த்திப் பிரஸ்தாபமே வருகிறது; ஆங்கும் உருத்திரனுக்கே பரத்துவம் உளதாதல் காண்க.
'தச் சக்த்யாதிஷ்டிதச்சச்வத்தச்சிஹ்நை ரபி சிஹ் நித:| தந்நாம நாமாதத்ரூபஸ் தத்கார்ய கரணக்ஷம:| தத்துல்ய வ்யவஹாரச்சததாஜ்ஞா பரிபாலக:' என்ற வாயு ஸம்ஹிதை இச்செய்யுட்குப் பிரமாணம். (உக)
******
உருத்திரரே சர்வத்துக்குங் காரண சொரூபரென்பது.
கண்ணுத லுருவ மாகிக் காரண மனைத்து மோங்குங்
கண்ணர விந்த மாவோன் காரிய மனைத்து மாவான்
மண்ணுறு கிரியை யெல்லா மலரவ னுருவா மென்னி
னெண்ணுவ ரானைச் சர்வ காரண னென்று மேலோர்.
(அ-ரை) கண் அரவிந்தமாவோன் - விஷ்ணு; மண் - உலகத்தில்.
'கார்யம் விஷ்ணு: க்ரியா ப்ரஹ்மா காரணம்து மகேச்வர:' என்ற ருத்ரஹ்ருதயோபநிஷத்தும், 'ஸர்வேசம் - - சிவம் - - ஸர்வகாரணம்' என்ற மண்டலப்ராஹ்மணோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (உ உ)
******
மோக்ஷ நாடிக்குத் தெய்வம் உருத்திரனே யென்பது.
நாடரு நாடி மூன்று ணாரண னிடையின் றெய்வம்
பீடுறு கமல வாசன் பிங்கலைத் தெய்வ மாவன்
வீடெனு மின்பைச் சீவர் மேவிட முதுகென் பூடே
யோடிடு சுழுனைத் தேவா யுறைபவன் சிவனே யாவான்.
(அ-ரை) நாடு அரு - ஆராய்தற்கரிய; பீடு - பெருமை; கமலவாசன் - பிரமன்; வீடெனும் இன்பை - முத்தியை; மேலிட - அடைய; என்பூடே - எலும்புக்கு நடுவில்.
'இடாவாமே ஸ்திதா பாகே தக்ஷ¢ணே பிங்களா ஸ்திதா|| ஸ¤ஷ¤ம்நா மத்ய தேசே' என்ற யோகசூடாமணியுபநிஷத்தும், 'ஸ¤ஷ¤ம்நாது பரே லீநா விரஜா ப்ரஹ்ம ரூபிணி| இடாதிஷ்டதி வாமேந பிங்களா தக்ஷ¢ணே நச' என்ற க்ஷ¤ரிகோபநிஷத்தும், 'ஸ¤ஷ¤ம்நாயா: சிவோ தேவ இடாயா தேவதா ஹரி: பிங்களா விரஞ்சி:' என்ற ஸ்ரீ ஜாபாலதர்சனோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (உங)
******
யோகிகளுக்குச் சரீரத்தைத் தளர்த்த உதவும் ரேசக வாயுவின் தெய்வம் உருத்திரனே யென்பது.
காலொரு மூன்றி னுள்ளே கண்ணுத விரேசி யாவான்
மாலவ னாவன் கும்பி மலரவன் பூரத் தாவான்
சாலவி ரேச மொன்றே தளர்த்திடு முடலை யென்னி
னாலம துண்டோ னன்றி யருந்துணை யோகர்க் குண்டோ.
(அ-ரை) கால் - காற்று; இரேசி - இரேசகத் தெய்வம்; கும்பி - கும்ப்கத்தெய்வம்; பூரத்து ஆவான் - பூரகத்தின் தெய்வமாயிருப்பான்; சால - மிகவும்; ஆலமது உண்டோன் - சிவபிரான்.
'ப்ரஹ்மா பூரக இத்யுக்தோ விஷ்ணு: கும்பக உச்யதே | ரேசோ ருத்ர இதிப் ரோக்த: ப்ராணாயாமஸ்ய தேவதா' என்ற தியாநபிந்தூபநிஷத்தும், 'தவமிக முயலும் போது தன்னுயிர்ப் புமிழ்வ தன்றிப் பவனெனு முணவுங் கொள்ளான், என்ற கோயிற் புராணமும், 'உணவு உடம்பை வாட்டுந் தவத்திற்கு விலக்கு' என்ற அதனுரைக் குறிப்பும், 'ஸதாசிவம் - - யோகித்யேயம் என்ற நாரதபரிவ்ராஜகோபநிஷத்தும், 'விரூபாக்ஷம் - - த்யாயேத் யோகீச் வரேச்வரம்' என்ற ஸ்ரீ ஜாபாலதர்சனோபநிஷத்தும், 'ஜுவந்முக்த: சிவயோக நித்ராச' என்ற நிர்வாணோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (உச)
******
உருத்திரனே பிராமண தெய்வமென்பது.
பிறையணி பரமன் றானே பிராமண தெய்வ மாவா
னிறைதிரு வுடைய வேந்தாய் நிலவுவன் சங்க மேந்தி
துறைவல வணிகன் வேதன் சூத்திரன் மகவா னென்னிற்
பிறையணி பரனை யன்றிப் பிராமணர் வணங்க லாமோ.
(அ-ரை) பிறையணி பரமன் - சிவபிரான்; திரு - செல்வம்; வேந்து க்ஷத்திரியன்; சங்கம் ஏந்தி - விஷ்ணு; துறை - வியாபார வித்தை; வணிகன் - வைசியன்; வேதன் - பிரமன்; மகவான் - இந்திரன்.
'த்வம் தேவேஷ¤ ப்ராஹ்மணோ அஸி அஹம் மநுஷ்யேஷ¤ ப்ராஹ்ம ணோவை ப்ராஹ்மணமுபதாவத் யுபத்வா தாவாமி' என்ற ஸாமவேத சதபத ப்ராஹ்மணமும், 'விப்ரா விப்ரஸ்ய' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'ப்ரஹ்மணோதிபதி: - - சிவோம்' என்ற நாராயணோபநிஷத்தும், விப்ராணாம் தைவதம் சம்பு; க்ஷத்ரியாணாம்து மாதவ:| வைச்யா நாந்து பவேத் ப்ரஹ்மா சூத்ராணாம் தேவேந்த்ர:' என்ற மனுஸ்மிருதியும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (உரு)
******
உருத்திரனே சர்வலோக பிதாவென்பது.
ஒருதிரு மருவு மார்பற் குறுகுறி யோனி யாகு
முருமிகு பீசந் தானே யுருத்திரன் குறியா மன்னோ
ரிருவரு மருவிப் பாரை யீனுவ ரென்னி னந்தப்
பெருவிடை யுயர்ப்போ னன்றிப் பிதாவெவ னுலகுக் கெல்லாம்.
(அ-ரை) ஒரு திரு மருவு மார்பற்கு - விஷ்ணுவுக்கு; உறு - பொருந்திய; யோனி - பகம்; உரு - அழகு; பீசம் - லிங்கம்; மருவி - புணர்ந்து; ஈனுவர் - பெறுவர்; பெருவிடையுயர்ப்போன் - சிவபிரான்.
'ருத்ராத் ப்ரவர்ததே பீஜம் பிஜயோ நிர் ஜநார்தந:' என்ற ருத்ர ஹ்ருதயோபநிஷத்தும், 'பிதரம் மஹேரம்' என்ற சரபோப நிஷத்தும், 'இதம் பித்ரே - - ருத்ரஸ்ய வர்தநம்' என்ற ருக் மந்திரமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (உசா)
******
உருத்திரனே எல்லா வுலகிற்கும் ஆதிழல மென்பது.
உலகெனு மரத்தி னுச்சி யுலகினை யளந்தோ னாவ
னுலமெனு மரத்தின் மைய முந்தியிற் பிறந்தோ னாவ
னுலகெனு மரத்தின் வேர்க ளுருத்திர னாவ னென்னி
னுலகினை வாழ வைப்போ னுருத்திர னன்றி வேறார்.
(அ-ரை) உலகினை அளந்தோன் - விஷ்ணு; மையம் - அடிமரம்; உந்தியிற் பிறந்தோன் - பிரமன்.
'அஸ்ய த்ரைலோக்ய வ்ருக்ஷஸ்ய பூமெளவிடபசாகிந:| அக்ரம் மத்யம் ததா மூலம் விஷ்ணு ப்ரஹ்ம மஹேச்வரா:' என்ற ருத்ரஹ்ருதயோப நிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (உஎ)
******
உருத்திரனே தர்ம சொருபி யென்பது
போதின னுருவ மாகிப் பொருந்துநான் மறையின் ஞானஞ்
சீதர னுருவ மாகித் திரிவித வுலகந் தங்குந்
தீதக றரும மீசன் றிவ்விய வுருவா மந்தப்
போதமு முலகுங் கொண்டு புரிவதத் தருமங் கண்டாய்.
(அ-ரை) போதினன் - பிரமன்; சீதரன் - விஷ்ணு; திரிவித - மூன்றுவகை; போதம் - ஞானம்; கொண்டு - சாதனமாகக்கொண்டு; புரிவது - செய்யத் தக்கது; அத்தருமம் - அச் சிவசொரூப தருமம்.
'தர்மோ ருத்ரோ ஜகத் விஷ்ணு: ஸர்வஜ்ஞாநம் பிதாமஹ:' என்ற ருத்ர ஹ்ருதயோபநிஷத்து இச் செய்யுட்குப் பிரமாணம். (உஅ)
******
உருத்திரனே பரமாத்மா வென்பது.
சங்கரன் பரம வான்மாச் சார்ங்கம தேந்தி யான்மாப்
பங்கய னந்த ரான்மா வெனமறை பகர்வ தோரா
ரிங்கொரு பரமான் மாவா யின்னொரு தேவை யேத்திச்
சங்கரன் றனக்குத் தோடஞ் சாற்றிலெந் நரகி வாழ்வார்.
(அ-ரை) சார்ங்கம தேந்தி - விஷ்ணு; பங்கயன் - பிரமன்; பகர்வது - சொல்வதை; ஓரார் - உணராதவர்; இன்னொரு தேவை - வேறெதேனும் ஒரு தெய்வத்தை; தோடம் - நிந்தை; சாற்ற்றி - கூறி; வெம் - கொடிய; ஆழ்வார் - அழுந்துவார்.
'ஆத்மாநம் பரமாத்மாந மந்தராத்மாந மேவச| ஜ்ஞாத்வாத்ரிவித மாத்மா நம் பரமாத்மாந மாச்ரயேத் | அந்தராத்மா பவேத் ப்ரஹ்மா பரமாத்மா மஹேச்வர:| ஸர்வேஷா மேவ பூதாநாம் விஷ்ணு ராத்மா ஸநாதந:' - - என்ற ருத்ரஹ்ருதயோப நிஷத்தும், 'யாஸ்ய ப்ரதமாரேகா - - ஸ்வாத்மா - - ப்ரஜாபதிர் தேவோ தேவதேதி | யாஸ் யாத்விதீயாரேகா - - அந்தராத்மா - - விஷ்ணுர் தேவோ தேவதேதி | யா¡ஸ்ய த்ரிதீயா ரேகா - - பரமாத்மா மஹா தேவோ தேவதேதி - -' என்ற ஜாபால்யுபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். ஆத்ம நிலையும் அந்தராத்ம நிலையும் பிரம விஷ்ணுக்களுக்கிடையில் மாறிக் கொள்வதையும் பரமாத்ம நிலைமாத்திரம் சிவபிரானை விட்டு விலகாமையையும் அவ்வுப நிஷத்துக்களிற் காண்க. (உகூ)
******
உருத்திரனே ஒப்புயர்வந்த பரம்பொருளென்பது
அப்பணி வேணித் தேவுக் கரியினைப் பிரமன் றன்னை
யொப்புட னுயர்ச்சி சொல்லே லும்பரிற் பிரமன் மேலோன்
திப்பிய விதியின் மேலோன் றிருமகள் கணவ னம்மாற்
கொப்புட னுயர்ச்சி யில்லா வுருத்திரன் மேலோன் றானே.
(அ-ரை) அப்பணி வேணித் தேவுக்கு - சிவபிரானுக்கு; உம்பரின் - தேவர்களைவிட; திப்பிய - திவ்விய; விதியின் - பிரமனைவிட.
'பராத் பரதரம் ப்ரஹ்மா தத்பராத் பரதோ ஹரி:| தத்பராத் பரதோ ஹீச: தஸ்மாத் துல்யோதிகோ நஹி' என்ற சரபோநிஷத்தும், 'தமீச் வராணாம் பரமம் மஹேச்வரம் - - நதத் ஸமச் சாப்யதிகச்ச த்ருச்யதே' என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (ங0)
******
உருத்திரனே மற்றிருவரையுஞ் சங்கரிப்பா னென்பது.
மருத்திக ழலரோன் றன்னை வாலிய சோற தாக்கித்
திருத்திக ழுரவோன் றன்னைத் திப்பிய ரசமே யாக்கி
மிருந்துவை யூற வைத்த மெல்லிய காய்தா னாக்கி
யுருத்திர னுண்பா னெல்லா வுலகையு மொடுக்கு ஞான்றே.
(அ-ரை) மருத்திகழலரோன்றன்னை - பிரமனை; வாலிய - வெண்மையான; திருத்திகழுரவோன்றன்னை - விஷ்ணுவை; மிருத்துவை - எமனை; ஊறவைத்த மெல்லியகாய் - ஊறுகாய்; ஒடுக்கு ஞா¡ன்று - சங்கரிக்குங் காலத்தில்.
'யஸ்ய ப்ரஹ்ம ச க்ஷத்ரஞ் சோபேபவத வோதந: ம்ருத்யுர் யஸ்யோப ஸேசநம்' என்ற கடோப நிஷத்தும், 'த்ரயம்பகே நாநுஷ்டுபேந| ம்ருத்யுஞ்ஜயும் தர்சயதி' என்ற திரிபுராதாபிநியுடநிஷத்தும், 'ப்ரஹ்மாந் நந்து ரஸோ ஹரிஸ்து பசவாந் போக்தா மஹேச:' என்ற ஸித்தாந்த ஸாராவளியும். 'அந்நம் ப்ரஹ்மாரஸோ விஷ்ணுர் போக்தாச் சைவ மஹேச்வா:' என்ற மந்திரமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். ரசங் கலந்த சோற்றுக்கு ஊறுகாய் தொட்டுக்கொள்ளும் வழக்கம் செங்கற்பட்டு ஜில்லாவில் இப்போதும் உண்டு. (நக)
******
உருத்திரனே பரதசாத்திரத்தாலும் பரமென வந்திக்கப்பட்டானென்பது.
தாமரைத் தவிசற் காகுந் தாமரை மலரின் சின்னந்
தாமரைக் கண்ணற் காகுஞ் சங்கெனுங் கருவிச் சின்னந்
தாமரைக் கையன் சின்னந் தலைமிசைக் கரங்கள் கூப்ப
லாமெனிற் பரத நூலு மரன்பரத் தைய முண்டோ.
(அ-ரை) தாமரைத் தவிசன் - பிரமன்; தாமரைக் கண்ணன் - விஷ்ணு; தாம் மரைக் கையன் - உருத்திரன்; பரத நூலும் ஆகும் ஆகும் ஆ(கு)ம் எனில் என்க.
'வஜ்ரண்யா முத்ரயா சக்ரம் பத்மிந்யாதர் சயேத்விதம் சங்கிந்யா கேசவம் ருத்ரம் சிரஸ்யஞ்ஜலிமுத்ரயா' என்ற பரத சாஸ்திரம் இச்செய்யுட்குப் பிரமாணம். (ஙஉ)
******
உருத்திரனை நாராயணன் மீறமாட்டா னென்பது
அக்கினி தன்னைக் கண்டா லப்புருக் குலைந்து போகு
முக்கிர நெருப்பைத் தன்னு ளுருத்திர னடக்கி நிற்பான்
சக்கர பாணி நொய்ய சலந்தனில் மிதப்ப னென்னி
னக்கன தாணை மீற நாரணன் வல்லான் கொல்லோ.
(அ-ரை) அப்பு - ஜலம்; உருக்குலைந்து போகும் - சுவறும்; நக்கனது - சிவபிரானுடைய.
'ஆபஸ் தேஜஹி ப்ரலீயந்தே' என்ற சுபாலோப நிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (ஙங)
தியானம் தியாதா தியேயர் இவரென்பது
சீதரன் றியான மாவன் சிவபிரான் றியேய னாவ
னோதவிர் தியாதா வாவ னுருத்திர னென்று சீவர்
தீதகன் றுய்யு மாறு சிவபிரான் மலர்மென் றானை
யாதரம் பெருக வேத்தி யதருவ சிகையோய்ந் தன்றே.
(அ-ரை) ஓது சொல்லப்பட்ட; அவிர் - சிறப்புடைய; அகன்று - நீக்கி; ஆதரம் - அன்பு; ஓய்ந்தன்று - 'ஸமாப்தாதர்வசிகா' வென்று தன்னைத் தானே முடித்துக் கொண்டு முடிந்தது.
'த்யாநம் விஷ்ணு: - - த்யாதா ருத்ர: - - த்யாயீ தேசாநம்' என்ற அதர்வசிகோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (ஙச)
******
இருதய குகையில் வசிப்பவர் சிவபிரானே யென்பது.
தகைபெறு பரம வான்மாச் சந்தத முயிர்க ளுள்ளக்
குகைதொறு மிருப்பன் கெளரி கொழுநனே யன்னோ னாவ
னகைமல ருறைவோன் மூன்றா நாதன்மா லாதி மற்றை
வகைபடு தேவரெல்லா மற்றவன் விபூதி யாவர்.
(அ-ரை) சாந்தம் - எப்போதும்; விபூதி - அதிஷ்டானங்கள்.
'மத்ய ஆத்ம நிதிஷ்டதி | ஈசாந:' என்ற கடோபநிஷத்தும், 'ப்ராணேஷ¤ ஹ்ருத் யந்தர் ஜ்யோதி: புருஷ:' என்ற ப்ருஹதாரண்யகோபநிஷத்தும், 'ப்ரமாத்மாவயவஸ் தித: | ஸ ப்ரஹ்மா ஸசிவ: ஸேந்த்ர:' என்ற நாராயணோபநிஷத்தும், 'உமாஸஹாயம் - - ஸப்ரஹ்ம ஸசிவ: -ஸ- விஷ்ணு:' என்ற கைவல்யோபநிஷத்தும், 'பரமாத்மாவ்யவஸ் தித: ஸ ப்ரஹ்மா ஸ ஈசாந: ஸேநத்ர:' என்ற மஹோபநிஷத்தும், 'த்வம் ப்ரஹ்மா த்வம் விஷ்ணு: த்வம் ருத்ர:' என்ற கணபதியுபநிஷத்தும், 'யோஸெள தேவோ பகவாந் ஸர்வைச்வர்ய ஸம்பந்ந: ஸர்வவ்யாபீ ஸர்வ பூதாநாம் ஹ்ருதயே ஸாந்நி விஷ்டோ மாயாவி மாயயா க்ரீடதி ஸ ப்ரஹ்மா ஸ விஷ்ணு: ஸ ருத்ர: ஸ இந்த்ர: ஸ ஸர்வே தேவா:' என்ற சாண்டில்யோப நிஷத்தும், 'த்ருதீயம் பாபாதம் ஜாநீயாத் ஸ ப்ரஹ்மா ஸ சிவ: ஸ ஹரி:' என்ற நரஸிம்ஹ பூர்வ தாபிநியுபநிஷத்தும், அவிசேஷேண ஸர்வம் துய: பச்யதி சிதந்வயாத்| ஸ ஏவ ஸாக்ஷ¡த் விஜ்ஞாநீ ஸ சிவ: ஸ ஹரிரர் விதி : என்ற வராஹோப நிஷத்தும், 'த்வம் ப்ரஹ்மா த்வம் ச வை விஷ்ணு: த்வம் ருத்ரஸ் த்வம் ருத்ரஸ் த்வம் விஷ்ணு:' என்ற பிராணக்கினிஹோத்ரோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (ஙரு)
******
சிவபிரானே சர்வகாரண காரணனென்பது.
காரணந் தனக்கொன் றில்லாக் காரண முலகுக் காரென்
றாரணம் வினவிச் சத்தே யாத்துமா பிரம மென்றக்
காரணந் தனையுங் கூறுங் கபாலியே யதுவா மென்ற
வாரண விசேடத் தச்சா மானிய மமையு மன்றே.
(அ-ரை) ஆரணம் - வேதம்; சத்து ஆத்துமா பிரமம் என்று அக்காரணந்தனையும் என்றதை சத்தென்றும் ஆத்துமாவென்றும் பிரமமென்றும் எனத் தனித்தனி கூட்டி அக்காரணந்தனை என நிறுத்துக. அது ஆம் - அக்காரணம் ஆகும்; விசேடத்து - விசேஷவாக்கியங்களுக் கேற்பவே; அச்சாமானியம் - அந்தச் சாமானிய வாக்கியங்கள்; அவை சத்து காரண மென்றலும் ஆத்துமா காரணமென்றலும் பிரமம் காரணமென்றலும் ஆக். அமையும் - பொருள் கொள்ளப்பட்டு அடங்கும்.
'ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரேந்த்ர:-- நகாரணம்', 'காரணம் - - சம்பு:' என்ற அதர்வசிகோபநிஷத்தும், 'விஷ்ணுச் சதுர்வக்த்ர: சம்புச்ச காரணா திபா:' என்ற பைங்களோபநிஷத்தை வியாபித்த 'ஸசாரணம் காரணா திபாதிப என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், 'உமார்த தேகம் வாதம் ஸர்வகாரண காரணம்' என்ற யோகதத்வோபநிஷத்தும், 'சம்போர் மஹா தேவம் - - ஸர்வகாரணகாரணம்' என்ற பஞ்சப்ரஹ்மோபநிஷத்தும், 'ய: காரணாநி நிகிலாநி' ,'கிம் காரணம் ப்ரஹ்ம' என்ற சுவேதா சுவதரோப நிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். ஜாபால்யுநிஷத் முதலியவற்றிலும் அத்தகைய வினாப்பார்க்கலாம். (ஙசா)
******
பாஞ்சராத்திரத் திரிமூர்த்திகள் வேறு வேதத்திரிமூர்த்திகள் வேறு என்பதும் சிவபிரான் வேதத்திரிமூர்த்திகளுக்கு மேற்பட்டவர் என்பதும்.
சங்கரு டணபி ரத்தி யுமவனி ருத்தர் தாமே
யிங்கொரு மூவர் மாலோ னிவர்க்கிறை யென்னு மானூல்
பங்கய னரன்மா லென்னும் பரர்களுக் கதீதன் கெளரி
பங்கின னெனுநால் வேத பாகிய மாமந் நூலே.
(அ-ரை) இவர்க்கு - இம்மூவருக்கும்; இறை - அதீதன்; மால்நூல் - பாஞ்சராத்தி புகமம்; பரர் - தேவர்; அதீதன் - கடந்தவன்; எனும் - என்கிற; வேத பாகியம் - வேதத்துக்குப்புறம்; அந்நூல் - அப்பாஞ்சராத்திராகமம்; பிரம ருத்ர இந்திர ரென்பவர் நாலாயிரப்பிரபந்தமூவர்.
'ரோஹிணீ தநயோ விச்வ அகாராக்ஷர ஸம்பவ: - - ப்ரத்யும்ந உகாராக்ஷர ஸம்பவ: - - அநிருத்தோஸெள மகாராக்ஷ¡ ஸம்பவ:| அர்த்த மாத்ராத்மக: க்ருஷ்ணோ யஸ்மிந் விச்வம் ப்ரதிஷ்டிதம்' என்ற கோபாலோத் தாதாபிநியுநிஷத்தும், 'ப்ரஹ்ம விஷ்ணு ருத்ராதீதம் - - சிவம்' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும், 'சிவம் - - ப்ரஹ்ம விஷ்ணு ருத்ராதீ நாமேக: என்ற மண்டலப்ரம்மணோபநிஷத்தும், 'நமே ப்ரஹ்ம நமே விஷ்ணுர் நமே ருத்ரோ--','ப்ரஹ்ம விஷ்ண் வீச', ' ந ப்ரஹ்மா ந ஹரி: சிவ:' என்ற தேஜோ பிந்தூப நிஷத்தும், 'ப்ரஹ்மா நாராயண: | சிவச்ச நாராயண: சக்ரச்ச நாராயண:' , 'த்வமேவ ப்ரஹ்மேசாந புரந்தர -- ' என்ற த்ரிபாத் விபூதி மஹாநாராயணோபநிஷத்தும், 'ப்ரஹ்மேந்த்ர ருத்ராதி' , என்ற தேஜோ பிந்துபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (ஙஎ)
******
சங்காரக் கடவுளே சிருட்டி திதிகளுக்குங் கர்த்தாவென்பது.
அழிதொழி லுஞற்றுந் தேவ னலதெவ னாதி தேவன்
பழிதவி ரவனே மாலைப் பதுமனை மீளத் தந்து
பொழிலினை யாள வல்ல புருடனா மாத லாலே
தொழிலவை மூன்று மந்தச் சுதந்தரன் றானே செய்வான்.
(அ-ரை) அழிதொழில் உஞற்றுந்தேவன் - சங்காரக்கடவுள்; ஆதி தேவன் - முதற்கடவுள்; பழிதவிர் - பொல்லாங்கு தவிர்ந்த; அவனே -அச்சங்காரக்கடவுளே; பதுமனை - பிரமனை; தந்து -சிருட்டித்து; பொழிலினை - உலகத்தை; தொழிலவை மூன்றும் - ஸ்ருஷ்டிஸ்திதி சங்காரங்களாகிய அம்முத்தொழில்களையுமே; அந்தச் சுதந்தரன்றானே - அந்தச் சங்காரக்கடவுளாகிய சிவபிரானே.
'யோவிஸ் புலிங்கேந லலாடஜேந ஸர்வம் ஜகத் பஸ்மஸாத்ஸம் கரோதி புநச்ச ஸ்ருஷ்ட்வா புநரப்ய ரக்ஷதேவம் ஸ்வதந்த்ரம் ப்ரகடீகரோதி', 'மஹேசோ பகவா நாதி தேவ:' ,' சங்கரோ பகவா நாத்யோ ராக்ஷ ஸகலா: ப்ரஜா:, 'பரமேச்வரோ ஸெள யஸ்யாங்கஜோ ஹம் ஹரிரிந்த்ர முக்யா', 'ஹரிம் ஹரந்தம் பாதாப்யாம்' என்ற சரபோப நிஷத்தும்,' 'ஹரிம் ஹரந்த மநுயந்தி தேவா விச்வஸ்யேசாநம் வ்ருஷபம் மதீநாம்' என்ற நாராயனோப நிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (ஙஅ)
******
திரிமூர்த்திகளும் உயிர்களே யென்பது
மூவரு முயிர்க ளென்று முதல்வனுக் குடல்க ளென்றும்
யாவரு மறியச் சொல்லு மெழின்மறை சிலவ ரந்த
மூவரு மபேத மென்று மூன்றதி கார மென்று
மூவமி சங்க ளென்று முரணுரைத் தழிவ ரந்தோ.
(அ-ரை) சிலவர் - சிலமனிதர்; முரண் - விபரீதம்.
'ஜீவ இதி ப்ரஹ்ம விஷ்ண் வீசா நேந்த்ராதீநாம் நாமரூபத்வாராஸ் தூலோஹ மிதி மித்யாஸ வஸாஜ்ஜீவ:' என்ற நிராலம்போபநிஷத்தும் 'தஸ்யப்ரோக்தா அக்ரயாஸ் தநவோ ப்ரஹ்மா ருத்ரோ விஷ்ணுரிதி' 'ப்ரஹ்மா ருத்ரோ விஷ்ணு - - ப்ரஸ்யாம்ருதஸ்ய சரீரஸ்ய' என்ற மைத்ராயண்யுபநிஷத்தும், 'அரியுரு வியல்பான்' என்ற தேவாரமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (ஙகூ)
******
சிவபிரானே பிரம மென்பது
பிரமவு பநிட மெல்லாம் பிரமனை யரியை நீக்கிப்
பிரமமென் றரனைப் போற்றும் பேரருட் குமர வேள்சுப்
பிரமணி யப்பேர் கொண்டான் பிராமிநல் லுமைக்குப் பேராம்
பிரமமென் றரனை யன்றிப் பேசிடே லாத லாலே.
(அ-ரை) பேசிடேல் - பிறதெய்வங்களைச் சொல்லாதே.
'நிர்விகல்பமநந்தம் - பரமம்சிவம்' என்ற பிரமபிந்தூபநிஷத்தும்' 'துரீய மக்ஷக்ஷரம் - - ஈச்வாச்ச' என்ற பிரமோபநிஷத்தும், 'தீபாகாரம் மஹாதேவம் - - ஜபேத்' என்ற பிரமவித்யோப நிஷத்தும், 'சிவ: பசு பதி: ஸாக்ஷ£ ஸர்வஸ்ய ஸர்வதா' என்ற பாசுபதப்ரஹ்மோபநிஷத்தும், 'துரீய மக்ஷரம் சிந்மயம்' என்ற பரப்ரஹ்மோப நிஷத்தும், 'தஸ்மை நமோ மஹா தேவாய மஹா ருத்ராய ப்ரோவாச தஸ்மை பகவாந்மகேச:' ,'துரீயம் ப்ரஹ்ம ஸம்ஜிதம்' என்ற பஞ்சப்ரஹ்மோபநிஷத்தும், 'ப்ராஹ்மீ மாஹேச்வரீச் சைவ' என்ற நிகண்டும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (ச0)
******
இதுவுமது.
உட்டெளி வுடையோ னொப்பி லுருத்திரா ராத னைக்கு
விட்டுணு பாகா யோட்ட விரையுமோங் காரத் தேரில்
மட்டறு மன்பா லூர்ந்து மக்கலப் பிரம லோகங்
கிட்டுக வெனலின் வேதங் கிளரதிற் பிரமம் யாரே.
(அ-ரை) உள் தெளிவு - உள்ளத்தில் அறிவு விளக்கம்; பாகு - சாரதி; விரையும் - வேகமாய்ச் செல்லுகிற; மட்டு அறும் - அளவு கடந்த ; ஊர்ந்து - ஏறிச்சென்று; கிட்டுக - அடைவாயாக; கிளர் அதில் - ஒளியுள்ள அந்தச் சுருதியிற் சொல்லப்பட்ட.
'ஓங்கார ரதமாருஹ்ப விஷ்ணும் க்ருத்வாத ஸாரதிம்| ப்ரஹ்ம லோக பதாந் வேஷீ ருத்ராராதந தத்பர:' என்ற அம்ருதநாதோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (சக)
******
இதுவுமது
பொங்கா வணிந்த பெம்மான் புண்ணிய முகங்க ளைந்தி
னிங்கித மனுக்க டம்மை யேவருஞ் செபித்து வாழ
மங்கல பிரம மென்று மறையெடுத் துரைக்கு மென்னிற்
பங்குமை யம்மைக் கீந்த பரமனிற் பிரம முண்டோ.
(அ-ரை) பொங்கு அரவு அணிந்த பெம்மான் - சிவபிரான்; இங்கித மனுக்கள் தம்மை - இனிய மந்திரங்களை; எடுத்து - விவரித்து.
'ஸத்யோ ஜாதாதி பஞ்ச ப்ரஹ்ம மந்த்ரை:' என்ற காலாக் நிருத்ரோப நிஷத்தும் ஜாபால்யுபநிஷத்தும், 'ஸத்யோ ஜாதம் ப்ரபத்யாமி ஸத்யோ ஜாதாயவை நமோ நம: - - வாமதேவாய நமோ ஜ்யேஷ்டாய நம: - - அகோரேப்யோத நமஸ்தே - - தத்புருஷாய - - ப்ரசோதயாத் || ஈசாந - - ஸதாசிவோம்' என்ற நாராயணோபநிஷத்தும், 'பஞ்சப்ரஹ்ம மந்த்ரை:' என்ற பஸ்மஜாபாலோபநிஷத்தும், 'தத்புருஷேசாநாகோரஸத்யோ ஜாதவாம தேவேப்யோ நம:' என்ற சுகரஹஸ்யோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (சஉ)
******
மோக்ஷயாத்திரை செய்யுஞ் சர்வான்மாக்களுக்கும் லக்ஷ்யம் சிவபிரானே யென்பது.
பிரணவ மென்னும் வில்லைப் பிடித்துய ரான்மாத் தன்னைச்
சரமென வைத்து வாங்கிச் சங்கர னடிக ளான
வரமுறு மிலக்கிற் பாய்ச்ச வல்லவன் றானே முத்தி
புரமதை யடைவா னென்று பொதுமறை சொல்லு மன்றே.
(அ-ரை) சரம் - அம்பு; வாங்கி - வளைத்து; வரம் - மேன்மை; இலக்கில் - லக்ஷ¢பத்தில்; பாய்ச்ச - போய்த் தங்கும்படி செலுத்த; முத்தி புரமதை - மோக்ஷ லோகத்தை.
'ப்ரணவோ தநுச் சரோஹ் யாத்மா ப்ரஹ்மதல் லக்ஷ்ய முச்யதே' என்ற முண்டகோபநிஷத்தும். தியாநபிந்தூநிஷத்தும், 'தநுஸ்தாரம் சரோஹ்யாத்மா ப்ரஹ்மதல் லக்ஷ்ய முச்யதே', 'சிவ லக்ஷ்யம் ந ஸம்சய:' என்ற ருத்ரஹ்ருதயோபநிஷத்தும், 'அந்தர் லக்ஷ்யம் - - உமாஸஹாயம் நீலகண்டம் ப்ரசாந்த மந்தர் லக்ஷ்யம்' , 'ஸர்வேசம் - - சிவம் - - ஏகலக்ஷ்யம்' என்ற மண்டலப்ராஹ்மணோபநிஷத்தும், 'பஹ¤நி புண்யாநி க்ருதாநியேந தேநைவ லக்ஷ்ய: பரமேச்வர:' என்ற சரபோபநிஷத்தும், 'துரீயாதீதம் பரம் ப்ரஹ்ம ப்ரஹ்ம ரந்த்ரேது லக்ஷ்யேத்' என்ற திரிசிசிப்ராஹ்மணோபநிஷத்தும், 'எத்தவத்தோர்க்கு மிலக்காய் நின்ற எம்பெருமான்' , 'மல்லை ஞாலத்து வாழுமுயர்க்கெலா - மெல்லையான பிரானார்' என்ற தேவாரமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (சங)
******
சிவபிரானே ஏகழம் அத்விதீயழமானவரென்பது.
உயர்வுட னொப்ப தின்றி யுள்ளதே யேக மாகு
முயிரினொ டுடன்வே றொன்றா யுறுவதத் துவித மாகு
முயரிய பிரமப் பேர்க்கு முருத்திரப் பெயர்க்குந் தானே
நயமுற வவற்றைக் கூட்டு நான்மறை யடைக ளாக்கி.
(அ-ரை) நயம் உற - ஏவகாரம் பொருந்த.
'போகுமாமழை' என்ற சிந்தாமணிச் செய்யுளில் வரும் 'ஏகம்' என்ற பதத்திற்குத் 'தனக்கு நிகரில்லாத' என்ற நச்சினார்க்கினியருரையும், 'இவ்வத்துவிதம் - - கலப்பும் உடனாதலும் வேறாதலுமாகிய மூன்றுந் தன் கட்டோன்ற நிற்றல்பற்றி அம்மூன்றற்கும் பொதுவாகக் கூறப்படும்' என்ற சிவஞான மஹாபாஷ்யமும், 'ஏகமேவாத்விதீயம் ப்ரஹ்ம' என்ற பைங்க ளோபநிஷத்தும், சகாஹஸ்யோபநிஷத்தும், திரிபாத்விபூதிமஹாநாராயணோப நிஷத்தும், 'ஏக ஏவ ருத்ரோ நத்விதீயாயதஸ்து' என்ற சுவேதா சுவத்ரோபநிஷத்தும், 'ஏகோ நாராயணோ நத்விதீயோஸ்தி' என்ற திரிபாத் விபூதி மஹா நாராயணோப நிஷத்தும், 'ஏகமத்வைதம்' என்ற பஸ்ம ஜாபாலோப நிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (சச)
******
நாராயணனைப் பிரமமென்பதற்குக் காரண மீதுவென்பது.
செருவல மாலோன் றன்னுட் சிவனைவைத் தேத்த லானும்
பொருவறு மனைவி யாயப் பூரணற் குறுத லானும்
பெருகிடு பகுதி உண்டம் பிரானென நடரத்த லானுந்
திருமறை பிரம மென்று சிலவிடத் துபச ரிக்கும்.
(அ-ரை) தன்னுள் - தன் இருதயத்தில்; பகுதியண்டம் - பிரகிருதி புவனம் வரை; பிரானென - தலைவனாயிருந்து; நடாத்தலானும் - ஆளுதலானும்.
'நாராயண: ஸ்தித: - - பத்மகோசப்ரதீகாசம் ஹ்ருதயம் சாப்யதோ முகம் - தஸ்ய மத்யே மஹா நக்கிர் விச்வார்ச்சிர் விச்வதோமுக: - - தஸ்ய: சிகாயாமத்யே பரமாத்மா வ்யவஸ்தித:' என்ற நாராயணோபநிஷத்தும், 'நாராயணப்பிரகரணத்திற் கூறப்பட்ட விருதயம் பிறரைச் சார்தற்கியை பின்மையின் அ·து அவனுடையதென்றல் பொருந்துமென்க' என்ற சதுர்வேத தாற்பரிய சங்கிரமும், 'அரியலாற் றேவி யில்லை யையனை யாறனார்க்கே' என்ற தேவாரமும், 'பிரகிருதிமாயைகாறும் வியாபித்து நிற்கும் பிரதிட்டாகலைக்கு மாயோன் அதிதெய்வம்' என்ற சிவஞான மஹாபாஷ்யமும், 'நாராயண பரம் ப்ரஹ்ம' என்ற நாராயணோப நிஷத்தும், 'நாராயணம் பரம் ப்ரஹ்ம' என்ற திரிபாத்விபூதிமஹாநாராயணோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (சரு)
******
பல பொருள்களைப் பிரமமென்பதற்குக் காரணமிதுவென்பது.
நாரண னளின னாத ஞாயிறு கரணம் பூத
மாருயி ருடல்காலன்ன மறிவிவை பிரம மென்றே
யாரண முரைக்கும் வெவ்வே றவையெலாஞ் சோபா னங்க
டாரணி சைவஞ் சார்ந்து சங்கர னருளிற் கூட.
(அ-ரை) நளினன் - பிரமன்; நாதம் - சப்தம்; ஞாயிறு - ஆதித்தன்; கால் - பிராணன்; அறிவு - ஞானம்; ஆரணம் - வேதம்; சோபானங்கள் - படிக் கிரமங்கள்; தாரணி - உலகத்தோர்; அருளிற் கூட - அருளுக்குப் பாத்திரமாகும்படி.
'நாராயணம் பரம் ப்ரஹ்ம' என்ற நாராயணோபநிஷத்தும், 'பசுவாந் ப்ரஹ்மா ஸர்வலோக பிதாமஹ:' என்ற மஹோபநிஷத்தும், 'அக்ஷ¡ம் பரமோ நாத: சப்தப்ரஹ்மேதி கத்யதே' என்ற யோகசிகோபநிஷத்தும், 'ஆதித்ய - - த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி' என்ற ஸ¤ர்யோப நிஷத்தும், 'அயமாத்மா ப்ரஹ்ம', 'அந்நம் ப்ரஹ்ம' என்ற பிருஹதாரண்யகோபநிஷத்தும், 'நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி' , 'அந்நம் ப்ரஹ்ம' 'ப்ராணோ ப்ரஹ்ம' , ' விஜ்ஞாநம் ப்ரஹ்ம' என்ற தைத்திரீயோப நிஷத்தும், 'ஓம் ப்ரஜ்ஞாநம் ப்ரஹ்ம' என்ற சுகரஹஸ்யோபநிஷத்தும், 'ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம' என்ற அம்ருதநாதோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (சசா)
******
பிரமமுதலிய பெயர்கள் சிவபிரானுக்கே உண்மை வாசகமாமென்பது.
போற்றுரை மிகுதி யானும் பொருளதி னிறைத லானுந்
தூற்றுரை யிலாமை யானுந் துகளிலொப் புரைக ளெல்லாந்
தேற்றம துரைத்த லானுஞ் சிவபிராற் களவில் வேதஞ்
சாற்றிய பிரம மாதி தனிப்பெய ரனைத்து மெய்யே.
(அ-ரை) போற்றுரை - புகழ்மொழி; பொருள் - உண்மை; தூற்றுரை - நிந்தை; துகள் இல் - குற்றமில்லாத; ஒப்புரைகள் - தெய்வங்களை வரிசைப்படுத்தி ஒத்திட்டுப் புகழும் வாக்கியங்கள்; 'பராத் பரதரோ ப்ரஹ்மா--' என்பது போலும். தேற்றம் - உயர்வு; நிச்சயம்.
'காரெழில் புரையுமேனிக் கண்ணனை யென்னைப் பின்னை - யாரையும் புகழும் வேத மான்றனைத் துதித்ததேபோ - லோருரை விளம்பிற்றுண்டோ வுரைத்தது முகமனென்றே - பேருலகறிய முன்னும் பின்னரும் விலக்கிற் றன்றே, என்ற கந்தபுராணம் இச்செய்யுட்குப் பிரமாணம். (சஎ)
******
பிரணவ மந்திரம் சிவசம்பந்தமுடையதென்பது
பிரணவ முமையாந் தாய்க்குப் பெரும்பெய ராகிச் சாரு
மரவணி யமல னீன்ற வைங்கர னவன்பின் வந்த
சரவண னிவர்க்குச் சாருந் தண்ணருண் முகங்க ளாகிச்
சிரவண மறையு ம·தைச் செப்பிடுஞ் சைவ மென்றே.
(அ-ரை) பெரும்பெயர் - உயர்ந்த பெயர்; சாரும் - பொருந்தும்; ஐங்கரன் - விநாயகர்; சரவணன் - சுப்பிரமணியர்; தண் - குளிர்ந்த; சிரவண மறை - கேட்கத்தகுந்த வேதம்; அ·தை - அப்பிரணவத்தை.
'உமாம் ஹைமவதீம்' என்ற கேநோபநிஷத்தும், 'ஓமெனப்படுங் குடிலையே யொப்பிலா முருகன் மாமுகத்துளொன்றாம் ' என்ற கந்தபுராணமும், 'ஓங்கார ஸ்வரூபிணம் மஹாதேவம்' என்ற பஸ்மஜாபாலோப நிஷத்தும், 'சிவோமே அஸ்து ஸதாசிவோம் என்ற நாராயணோப நிஷத்தும், 'ஸ¤ப்ரஹ்மண்யோம் ஸ¤ப்ரஹ்மண்யோம் ஸ¤ப்ரஹ்மண்யோம்' என்ற தைத்திரீய ஆரண்யகமும், 'ஓம் ப்ரணவா நந தேவாய நம:' என்ற விநாயக மந்திரமும், 'த்யாயே தோங்கார மீச்வரம்' , 'ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹமத்யேயம் ஸர்வமுமுக்ஷ¤பி' என்ற தியாகபிந்தூபநிஷத்தும், 'உமாக்யா ப்ரணவாத்மிகா' என்ற சம்பவ காண்டமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (சஅ)
******
ஹரி: ஓம் என்பது உமையொரு பாகனைச் சுட்டுமென்பது.
தூயவ ரரியோ மென்று தொடங்குவர் வேதந் தன்னை
யேயிதை யறியாய் கொல்லோ வென்றிடி னியம்பக் கேணீ
தாயரி பதத்துக் கர்த்தந் தந்தையா மோமுக் கர்த்தம்
வேயுறு தோளி பங்கன் மேலதா மாத லாலே.
(அ-ரை) ஏ- நகையாடும் இடைச்சொல்; வேயுறுதோளிபங்கன் - அம்மையப்பன்; அது வேயுறுதோளிபங்கன் மேல் ஆம் என்க; அது - அந்த ஹரி; ஓம் என்பது.
'அவரரியோமென்றாதி யறைகுவ துணர்வீரென்றா - ரிவர·தம்மையப்ப ரியற்றிரு நாமமென்றார்' என்ற குமரகுருபர சுவாமிகள் சரிதம் இச்செய்யுட்குப் பிரமாணம். (சகூ)
******
காயத்திரி மந்திரத்தால் வந்திக்கப்படுந் தெய்வம் சிவபிரானே யென்பது.
உவமனில் பருக்கச் சொல்லை யுரூடியாய் வைத்து வேதஞ்
சிவபிரான் றானே காயத் திரிப்பொரு ளென்று செப்புங்
குவலய்ந் தன்னில் வேதக் கொலை ஞரவ் வுரூடிப் பேரை
யவமுறும் யோக மாக்கி யரிமுதற் பிறர்மேல் வைப்பார்.
(அ-ரை) பருக்கச் சொல்லை - 'பர்க:' என்ற பதத்தை; உரூடி - இடுகுறி, காரண இடுகுறியுமாம்; குவலயந்தன்னில் - உலகில்; வேதக்கொலைஞர் - வேதத்துக்கு விபரீதார்த்தஞ் செய்து வேதபுருஷனை மனம் நோவச் செய்பவர்; அவம் உறும் - பலவற்றினும் போய்ப்பற்றி விபசரிக்கிற; யோகம் - காரணப்பெயர்.
'தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி| தியோயோந: ப்ரசோதயாத்' என்ற நாராயணோபநிஷத்தும், 'பர்கோக்யோ - - பர்ந இதி ருத்ரோ ப்ரஹ்ம வாதிநோத' என்று மைத்ராயண்யுபநிஷத்தும், 'பர: சிவ: - - பர்க உச்யதே' என்று திரிபுராதாபிநியுபநிஷத்தும் அம்மந்திரத்துக்கு உரை கூறியதும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (ரு0)
சிவமாம் தெய்வத்தின்மேல் தெய்வம் இல்லை.
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க.
ஸ்ரீ சிவஞான சுவாமிகள் திருவடி வாழ்க.